விழுப்புரத்தில் பயங்கரம்.. திமுக பொதுக்குழு உறுப்பினர் ஓட ஓட விரட்டி படுகொலை.. பதற்றம்.. போலீஸ் குவிப்பு.!
விழுப்புரம் அருகே திமுக பிரமுகர் 3 பேர் கொண்ட கும்பலால் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அருகே திமுக பிரமுகர் 3 பேர் கொண்ட கும்பலால் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வானுர் அடுத்த கோட்டக்கரை பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார்(51). இவர் திமுக கட்சியின் பொதுக்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இவரது தாய் முன்னால் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். நேற்று இரவு தனது சொந்த வேலை காரணமாக கோட்டக்கரையில் இருந்து திருசிற்றம்பலம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
இதையும் படிங்க;- 3 பெண்கள் கொலை.. உடல் பாகங்கள் வெவ்வெறு இடத்தில் வீச்சு.. 4வது கொலைக்கு ஸ்கெட்ச் போட்ட போது சிக்கிய தம்பதி.!
அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் ஜெயக்குமாரை வழிமறித்தனர். சுதாரித்து கொண்ட ஜெயக்குமார் இருசக்கர வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு அவர்களிடம் தப்பிக்க முயற்சித்தார். ஆனால், அவரை விடாமல் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனையடுத்து, அக்கும்பல் அங்கிருந்து தப்பியது.
படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜெயக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திமுக உறுப்பினர் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க;- திமுக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு.. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி.. பதற்றம்.. போலீஸ் குவிப்பு..!