3 பெண்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டு உடல் பாகங்கள் வெவ்வெறு இடத்தில் வீசி சென்ற சம்பவம் தொடர்பாக  தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

3 பெண்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டு உடல் பாகங்கள் வெவ்வெறு இடத்தில் வீசி சென்ற சம்பவம் தொடர்பாக தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கர்நாடகா மாநிலத்தில் கடந்த சில மாதங்களில் தொடர்ந்து 3 பெண்களின் உடல்கள் பாகங்கள் வெவ்வேறு இடத்தில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் போலீசாருக்கு சித்தலிங்கப்பா என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து, பெங்களூருவில் இருந்த அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, பல்வேறு அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். 

இதையும் படிங்க;- 3 பெண்கள் கொலை.. உடல் பாகங்கள் வெவ்வெறு இடத்தில் வீச்சு.. 4வது கொலைக்கு ஸ்கெட்ச் போட்ட போது சிக்கிய தம்பதி.!

இது தொடர்பாக போலீசார் தரப்பில் கூறுகையில்;- பாலியல் தொழில் செய்துவந்த பெண்ணுக்கும் சித்தலிங்கப்பாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. தனியாக வீடு எடுத்து கணவன் மனைவி போல் இருவரும் வாழ்ந்து வந்தனர். அப்போது, தான் பாலியல் தொழிலுக்கு வந்ததற்கு 5 பெண்கள்தான் காரணம் எனக் கூறியிருக்கிறார். 

இதையும் படிங்க;- ரத்தப்போக்கு ஏற்பட்டும் விடாமல் கூட்டு பாலியல் பலாத்காரம்.. பெண்ணை நிர்வாணமாக சாலையோரம் வீசி சென்ற கொடூரம்.!

இதனால் ஆத்திரமடைந்த சித்தலிங்கப்பா அந்த 5 பெண்களையும் கொலை செய்ய திட்டமிட்டார்.. அதன்படி குறிப்பிட்ட அந்தப் பெண்களை மாண்டியாவில் உள்ள தங்கள் வீட்டுக்கு வரவழைத்து கொலை செய்துள்ளனர். அந்த உடல்கள்தான் கடந்த மாதம் ஜூன் 8-ம் தேதி கண்டெடுக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து 4-வது பெண்ணைக் கொலை செய்யத் தயாரான நிலையில்தான் போலீசாரிடம் மாட்டிக்கொண்டனர். இதனையடுத்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.