ரத்தப்போக்கு ஏற்பட்டும் விடாமல் கூட்டு பாலியல் பலாத்காரம்.. பெண்ணை நிர்வாணமாக சாலையோரம் வீசி சென்ற கொடூரம்.!
மகாராஷ்டிராவில் 35 வயது பெண் கூட்டு பாலியல் செய்து நிர்வாண நிலையில் சாலையோரம் வீசி சென்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் 35 வயது பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து நிர்வாண நிலையில் சாலையோரம் வீசி சென்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், பண்டாரா மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயது பெண் ஜூலை 30ம் தேதி வீட்டில் சண்டை போட்டு கொண்டு சகோதரன் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வழியில் 3 பேர் பெண்ணுக்கு உதவி செய்வதாக நடித்து, அவரை காட்டு பகுதிக்கு அழைத்து சென்று விடாமல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இதனால், அந்த பெண்ணுக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டது.
இதையும் படிங்க;- ஃபர்ஸ்ட் நைட் முடிந்த மறுநாளே இளம்பெண் செய்த காரியம்.. 15 லட்சத்தை இழந்த புதுமாப்பிள்ளை கதறல்.!
பின்னர், அந்த பெண்ணை நிர்வாண நிலையில் சாலையில் தூக்கி எரிந்துவிட்டு அவர்கள் சென்றனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆபத்தான நிலையில் மீட்டு உள்ளூர் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக நாக்பூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அந்தப் பெண்ணின் உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவுசெய்து குற்றவாளிகள் 2 பேரை கைது செய்திருக்கின்றனர்.
இதையும் படிங்க;- மசாஜ் சென்டரில் மஜாவாக நடைபெற்ற விபச்சாரம்.. கஸ்டமர் போல் வந்து அலேக்கா தூக்கிய போலீஸ்.!
ஒருவர் தலைமறைவாகி உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த வழக்கை பெண் ஐ.ஏ.எஸ் தலைமையிலான சிறப்பு விசாரணைக்குழு விசாரிக்க முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டிருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு சிறப்பான சிகிச்சையளிக்கவும், வழக்கை விரைவு நீதிமன்றத்தில் நடத்தவும் முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார்.
இதையும் படிங்க;- ஆசையாக நெருங்கும் போதெல்லாம் ஃபுல் மப்பில் தூங்கிய கணவர்.. ஏக்கத்தில் இருந்த மனைவி செய்த பகீர் சம்பவம்..!