Asianet News TamilAsianet News Tamil

திமுக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு.. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி.. பதற்றம்.. போலீஸ் குவிப்பு..!

திமுக பிரமுகர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் திருத்தணியில் பெரும் பதற்றத்தியுள்ளதை அடுத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

dmk leader murder in tiruthani...Police investigation
Author
First Published Aug 9, 2022, 10:44 AM IST

திமுக பிரமுகர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் திருத்தணியில் பெரும் பதற்றத்தியுள்ளதை அடுத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஜெ.ஜெ.நகரில் வசித்து வந்தவர் மோகன். திமுக பிரமுகரான இவர், நேற்றிரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, 3 பேர் அவரை பின் தொடர்ந்துள்ளனர். ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வந்து கொண்டிருந்த மோகனை பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் வழிமறித்தனர். இதனையடுத்து, அவரை சுத்துப்போட்டு முகம் மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டினர். 

இதையும் படிங்க;- பார்த்ததுமே பத்திக்கிச்சு! புகார் கொடுக்க வந்த பெண்ணை கரெக்ட் செய்த எஸ்.ஐ! கதறிய கணவர் தற்கொலை.. ஆடியோ வைரல்

dmk leader murder in tiruthani...Police investigation

இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த மோகன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்தது. இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். 

dmk leader murder in tiruthani...Police investigation

தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்த போலீசார் மோகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டதால் அப்பகுததியில் பதற்றம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

இதையும் படிங்க;-  வரதட்சனை கேட்டு அடி உதை.. 4 மாத கர்ப்பிணி பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த மாமியார்..

Follow Us:
Download App:
  • android
  • ios