10 நிமிஷத்துல ஆம்பளன்னு காட்டுறேன்.. இளம் பெண்களை இழுத்து போட்டு அசிங்கம் பண்ண திமுக கவுன்சிலர்.
தங்கள் நிலத்தில் 5 ஏக்கர் கரும்பை அடியாட்களை வைத்து வெட்டி சென்றதுடன், தன்னையும் தன் சகோதரியையும் மானபங்கப் படுத்தியதாக திமுக கவுன்சிலர் மீது பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
தங்கள் நிலத்தில் 5 ஏக்கர் கரும்பை அடியாட்களை வைத்து வெட்டி சென்றதுடன், தன்னையும் தன் சகோதரியையும் மானபங்கப் படுத்தியதாக திமுக கவுன்சிலர் மீது பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ரிஷிவந்தியம் திமுக ஒன்றிய கவுன்சிலர் இயேசு ரட்சகர் மீது இந்த புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில் பட்டு அருகே உள்ளது சுத்தமலை கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் வின்சென்ட், இவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார், இவரது மனைவி இரண்டு குழந்தைகள் சுத்தமலை கிராமத்திலேயே வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமாக சுத்தமலையில் 5 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை அபகரிக்க நீண்ட நாட்களாகவே திமுக ரிஷிவந்தியம் ஒன்றிய கவுன்சிலர் இயேசு ரட்சகர் என்பவர் முயன்று வருகிறார்.
ஆனால் வின்சென்ட் குடும்பத்தினர் அதை விட்டுக் கொடுக்கவில்லை, ஆனால் அதை அபகரிக்க பல்வேறு முயற்சிகளை அவர் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில்தான் வின்சென்ட் குடும்பத்தினர் 5ஏக்கர் நிலத்தில் கரும்பு விவசாயம் செய்துள்ளனர், கரும்பு விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்தது, இந்நிலையில்தான் அடியாட்களுடன் வந்த இயேசு ரட்சகர் மொத்த கரும்பையும் வெட்டி தனது பெயரில் மூங்கில்துறைப்பட்டு சர்க்கரை ஆலையில் கொடுத்து ஐந்து லட்ச ரூபாய் அளவுக்கு மோசடி செய்துள்ளார்.
இதையும் படியுங்கள்: தாயிடம் சபதம்! கேஜிஎப் ராக்கிபாய் ஆக ஆசை! 6 பேரை அசால்டாக போட்டு தள்ளிய சிறுவன் சீரியல் கில்லராக மாறிய கொடூரம்
இதுதொடர்பாக வின்சென்ட்டின் மனைவி எல்வீரா மூங்கில் பட்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார், அந்தப் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர், ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, தனக்கு எதிராக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதை அறிந்த இயேசு ராஜா அடியாட்களுடன் எல்வீராவின் வீட்டிற்கு வந்து அவரையும் அவரது சகோதரியையும் மற்றும் அவரது தாயார் மற்றும் சித்தி ஆகியோர் இழுத்து போட்டு அடித்து உதைத்துள்ளனர். எல்வீரா மற்றும் அவரது சகோதரியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதையும் படியுங்கள்: குறைந்த விலைக்கு பிரியாணி கொடுக்காததால் ஆத்திரம்.. ஊழியரின் மூக்கை வெட்டிய இளைஞர்.. சென்னையில் அதிர்ச்சி.!
இதில் பலத்த காயம் அடைந்த அவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தங்களைத் தாக்கி மானபங்கம் செய்த கவுன்சிலர் ஏது ரட்சகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எஸ்பி அலுவலகத்தில் மீண்டும் எல்வீரா புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த எல்வீரா கூறியதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்டம் சுத்தமலை கிராமத்தில் எங்களுக்கு 5 ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு கரும்பு விவசாயம் செய்து வருகிறோம், கொஞ்ச நாளைக்கு முன்னாடி திமுக கவுன்சிலர் இயேசு ரட்சகர் 50க்கும் மேற்பட்ட அடியார்களோடு அங்கு வந்து கரும்புகளை வெட்டி மூங்கில்துறைபட்டு மில்லில் விற்றுவிட்டார்.
இது தொடர்பாக நாங்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்தனர். இந்நிலையில் நேற்று மாலை நான் எனது சகோதரி மற்றும் தாயாருடன் வீட்டில் இருந்தோம், இது தெரிந்து கொண்டு அங்கு வந்த இயேசு ரட்சகர், 45 அடியாட்களுடன் எங்கள் வீட்டிற்குள் நுழைந்து, நீங்கள் என்மீது போலீசில் புகார் கொடுத்து விட்டு எப்படி வாழ்ந்து விடுகிறீர்கள்னு பார்க்கிறேன், இந்த நிலத்தில் எப்படி விவசாயம் செய்றீங்கன்னு பார்க்கிறேன் என மிரட்டினார்.
அதை எனது சகோதரி வீடியோ எடுக்க முயற்சித்த நிலையத்தில், அவர்கள் எங்களை ஆடைகளைக் கிழித்து மானபங்கப்படுத்தி விட்டனர். பத்து நிமிடத்தில் ஆம்பளைன்னு காட்டுறேன் அவள தூக்கிபோடுங்கடான்னு சொல்லி தகாத வார்த்தைகளில் பேசி கடுமையாகத் தாக்கினர். இவ்வாறு அந்த பெண் கூறியுள்ளார்.