Asianet News TamilAsianet News Tamil

தாயிடம் சபதம்! கேஜிஎப் ராக்கிபாய் ஆக ஆசை! 6 பேரை அசால்டாக போட்டு தள்ளிய சிறுவன் சீரியல் கில்லராக மாறிய கொடூரம்

 நான் கேஜிஎப்-2 படத்தை பார்த்து ராக்கிபாய் போல கேங்ஸ்டர் ஆக வேண்டும் என முடிவு செய்தேன். அதில் வரும் ராக்கி பாய் கெட்டப் என்னை மிகவும் ஈர்த்தது. அதேபோல எனது நடை செயல்பாடுகளை மாற்றிக் கொண்டேன். நான் 65 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டுவதற்கு முன்பு இந்த உலகம் என்னை விரைவில் அறிந்து கொள்ளும் என்று என் தாயிடம் சபதம் செய்து விட்டு வீட்டிலிருந்து புறப்பட்டேன்.

KGF movie inspired murder..19-year-old serial killer Arrest
Author
First Published Sep 3, 2022, 2:33 PM IST

கேஜிஎப் திரைப்படம் பார்த்துவிட்டு தானும் அப்படத்தில் வருவதைபோல பிரபலமாக வேண்டும் என 5 கொலைகளை 19 வயது இளைஞன் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய பிரதேசத்தில் சாகர் மாவட்டத்தில் காவலர்கள் 3 பேர் அடுத்தடுத்து  கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது. இந்த தொடர் கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் 2-வதாக கொலை செய்யப்பட்ட காவலாளி ஒருவரின் செல்போனை கொலையாளி தூக்கி சென்றது தெரியவந்தது. 

அந்த செல்போன் நம்பர் மூலம் கொலையாளியை பின் தொடர தொடங்கினர். போலீஸ் பாதுகாப்பு அதிகரித்ததால் கொலையாளி போபால் நகருக்கு சென்றான். தனிப்படை போலீசார் நள்ளிரவு போபால் நோக்கி விரைந்து சென்றனர். அந்த நேரத்தில் கொலையாளி போபால் நகரில் உள்ள ஒரு பளிங்கு கடையில் இருந்த காவலாளி சோனு வர்மா (27) என்பவரை பயங்கரமாக தாக்கினார். அங்கிருந்த பளிங்கு கற்களை எடுத்து காவலாளி தலையில் அடித்தான். இதில் பளிங்கு கல் இரண்டாக உடைந்து விழுந்தது. உடைந்த ஒரு துண்டை மீண்டும் எடுத்து சினிமாவில் வரும் காட்சியை விட பயங்கரமாக அடித்தான். இதில் அந்த காவலாளி துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

கொலையாளி தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து அங்கிருந்து தப்பித்துவிட்டார். இந்த கொலை தொடர்பான காட்சிகள் அங்கு பொறுத்திருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இதனை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து கொலையாளி தனது கொலையை அரங்கேற்றி வருவதால் அவனை தீவிரமாக கண்காணிக்க தொடங்கினர். 2 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் கொலையாளியின் செல்போன் ஆன் செய்யப்பட்டது. இதன் மூலம் போபால் நகரில் ஒரு சாலையில் உலா வந்து கொண்டிருந்த கொலையாளியை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். போலீஸ் விசாரணையில் கொலையாளி ஷிவ் பிரசாத் துரூவ் (19) என்பது தெரிய வந்தது. மேலும் அவர் காவலர்களை கொடூரமாக கொலை செய்தது உறுதியானது.

அவனை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு சாகர் நகர் போலீஸ் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது, நான் இன்னொருவரையும் கொன்று போட்டு உள்ளேன் எனக் கூறினார். அதை கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர் சொன்ன இடத்திற்கு வந்து பார்த்த போது கொடூரமான முறையில் காவலாளி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக சீரியல் கில்லரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகின.

அப்போது ஷிவ்பிரசாத் துரூவ் அளித்த வாக்குமூலத்தில்:- நான் கேஜிஎப்-2 படத்தை பார்த்து ராக்கிபாய் போல கேங்ஸ்டர் ஆக வேண்டும் என முடிவு செய்தேன். அதில் வரும் ராக்கி பாய் கெட்டப் என்னை மிகவும் ஈர்த்தது. அதேபோல எனது நடை செயல்பாடுகளை மாற்றிக் கொண்டேன். நான் 65 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டுவதற்கு முன்பு இந்த உலகம் என்னை விரைவில் அறிந்து கொள்ளும் என்று என் தாயிடம் சபதம் செய்து விட்டு வீட்டிலிருந்து புறப்பட்டேன். இந்த உலகம் என்னை விரைவில் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இரவு நேரங்களில் காவலாளிகளை குறி வைத்து அடித்தே கொன்றேன். அதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்க திட்டமிட்டேன் என சர்வ சாதாரணமாக சினிமா வில்லன் போல கூறினான். ஷிவ் பிரசாத் துரூவ் நல்ல மனநிலையில் இருப்பதை போலீசார் உறுதி செய்தனர். சினிமா படத்தை பார்த்து அவரது சிந்தனை மாறி உள்ளதாக தெரிவித்துள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios