Asianet News TamilAsianet News Tamil

ஆயுத எழுத்து சீரியல் நிறுத்தப்பட்டது ஏன்? நாயகி சரண்யா வீடியோ வெளியிட்டு கொடுத்த விளக்கம்!

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வந்த ஆயுத எழுத்து சீரியல் திடீர் என தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து இந்த சீரியல் நாயகி சரண்யா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
 

why stopped in ayutha ezhuthu serial saranya share the video
Author
Chennai, First Published Sep 20, 2020, 10:51 AM IST

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வந்த ஆயுத எழுத்து சீரியல் திடீர் என தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து இந்த சீரியல் நாயகி சரண்யா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கிறது விஜய் டி.வி. முழுக்க, முழுக்க பொழுது போக்கு நிகழ்ச்சிகளை சிறப்பாக வழங்கி மக்களை மகிழ்வித்து வருகிறது. சீரியல், காமெடி, நடனம், பாடல் என அனைத்து நிகழ்ச்சிகளின் ரேட்டிங்கும் வேற லெவல். 

why stopped in ayutha ezhuthu serial saranya share the video

கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர், கே.பி.ஒய் சாம்பியன்ஸ், எங்க கிட்ட மோதாதே என நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, மெளன ராகம், பாண்டியன் ஸ்டோர்ஸ், ஆயுத எழுத்து, நாம் இருவர் நமக்கு இருவர், சரவணன் மீனாட்சி என பல சீரியல்களும் இல்லத்தரசிகளின் விருப்ப பட்டியலில் தனி இடம் பிடித்துள்ளது. 

why stopped in ayutha ezhuthu serial saranya share the video

இந்நிலையில் தற்போது நிலவும் கொரோனா பிரச்சனை காரணமாக பல சீரியல்கள் படப்பிடிப்பை முறையாக நடத்த முடியாமல் திண்டாடி வருகின்றன தயாரிப்பு நிறுவனங்கள். அதனால் பல சேனல்களில் சீரியல்கள் திடீர் ஏன் நிறுத்தப்பட்டுள்ளது. 

why stopped in ayutha ezhuthu serial saranya share the video

சமீபத்தில் விஜய் தொலைக்காட்சி கூட தனது மெளன ராகம் தொடர் இந்த வாரத்தோடு முடிய உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் அதன் பார்ட் 2 விரைவில் வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘ஆயுத எழுத்து’ சீரியல் திடீரென்று நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

why stopped in ayutha ezhuthu serial saranya share the video

இந்நிலையில் இந்த சீரியல் நாயகிக்கு பலர் திடீர் என 'ஆயுத எழுத்து' சீரியல் நிறுத்தப்படுவதற்கான காரணம் என்ன? என தொடர்ந்து வாட்ஸ்ஆப் மற்றும் சமூக வலைத்தளம் மூலம் கேள்வி எழுப்பி வந்ததால், வீடியோ வெளியிட்டு பதில் கூறியுள்ளார். இந்த வீடியோவில், உண்மையில் தனக்கும் ஏன் இந்த சீரியல் நிறுத்தப்படுகிறது என்பது தெரியவில்லை. இதற்கான காரணம் தெரிந்ததும் நான் கண்டிப்பாக உங்களிடம் தெரிவிக்கிறேன். இத்தனை நாள், நீங்கள் எனக்கு கொடுத்த ஆதரவிற்கு நன்றி என தெரிவித்து, விரைவில் மற்றொரு சீரியலில் சந்திக்கிறேன் என கூறியுள்ளார்.

அந்த வீடியோ இதோ...

Follow Us:
Download App:
  • android
  • ios