ஸ்ரீ ரெட்டி சொல்வது அனைத்தும் உண்மைதானா..?! முந்திக்கொண்ட நானி....!
ஸ்ரீ ரெட்டி சொல்வது அனைத்தும் உண்மைதானா..?! முந்திக்கொண்ட நானி....!
தெலுங்கு நடிகையான சர்ச்சை நடிகை ஸ்ரீ ரெட்டி, சினிமாவில் வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்ததாக தொடர் குற்றம் சாட்டி வந்தார்.
தெலுங்கு திரை உலக நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் என பலரது பெயரும் அடிப்பட்டது. பின்னர் நடிகர் நானி பெயரை பதிவிட்டு அவரும் தன்னுடன் நெருக்கமாக இருந்தார் என அவர் தெரிவித்து இருந்தார்.
தற்போது பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை தெலுங்கில் தொகுத்து வழங்கும் அவர் மீது பாலியல் குற்றசாட்டை முன் வைத்தார் ஸ்ரீ ரெட்டி.
இதற்கு பதில் அளித்த நானி, ஸ்ரீ ரெட்டி என்னுடைய பெயருக்கு கேடு விளைவிக்கிறார்..அதற்காக என்னிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.
மீண்டும் நானிக்கு பதில் அளித்த அறி ரெட்டி, "உங்களுக்கு குடும்பம் உள்ளது..பிள்ளைகள் உள்ளனர் .. அவர்கள் மீது சத்தியம் செய்து கூறுங்கள்..தாங்கள் என்னிடம் படுக்கையை பகிரவில்லையா என்று என கேள்வி எழுப்பினார்.
இந்த தருணத்தில் ஆதரவு குரல் கொடுத்தவர் தான்.....நடிகர் விஷால் ரெட்டி அவர்கள்...
விஷால்..!
நடிகர் நானிக்கு ஆதரவாக விஷால் குரல் கொடுத்தார்...நடிகர் நானி மரியாதை தெரிந்தவர்..அவருக்கு யாருடன் எப்படி பழக வேண்டும் என்று தெரியும்..குறிப்பாக பெண்களிடம் மிகவும் மரியாதையா பழகும் தன்மை கொண்டவர்.
அவர் இது போன்ற விஷயத்தில் ஈடுபட்டு இருக்க மாட்டார் என தெரிவித்து இருந்தார்.
இதற்கு பின்னர் கோலிவுட் பக்கம் திரும்பிய ஸ்ரீரெட்டி...
தற்போது ஸ்ரீ ரெட்டி தெலுங்கு முடிந்து, தமிழ் திரை நட்சத்திரங்கள் பக்கம் திரும்பி உள்ளார். அதில் முதலாவதாக இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ், அடுத்ததாக ரோஜாக்கூட்டம் ஸ்டார் ஸ்ரீகாந்த் அடுத்ததாக நடன இயக்குனர் லாரன்ஸ் என பட்டியல் நீள்கிறது.
இதில் என்ன ஒரு சுவாரிசியம் என்றால், நடிகர் நானி மட்டும் தான் ஸ்ரீ ரெட்டி குற்றசாட்டுக்கு கொஞ்சமாவது எதிர்ப்பும், விளக்கமும் கொடுத்து உள்ளார்.
மற்றவர்கள் அமைதியாக, ஸ்ரீ ரெட்டி என்றால் யாரென்றே தெரியாது என்ற அளவிற்கு அவர்கள் வேளையில் அமைதியாக இருகின்றார்கள்.
ஸ்ரீ ரெட்டி பதிவிட்ட செய்தி அந்த குறிப்பிட்ட நடிகர்களுக்கு இதுவரை தெரியாதவாறு உள்ளனர்.
இதற்கு மத்தியில், டி.ராஜேந்திரன், ஸ்ரீ ரெட்டி விவகாரத்தில் தொடர்புடைய நபர்கள் ஸ்ரீ ரெட்டியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க வேண்டும் என்றும் ஒழுக்கம் மிகவும் முக்கியம்....ஒழுக்கமாக நடந்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.