மித்ரனுக்காக செம பிட்டாக மாறிய விஜயகாந்த் மகன் 'ஷண்முக பாண்டியன்'!
பிரபல நடிகரும், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் தற்போது தமிழ் சினிமாவில் தன்னை ஒரு நடிகனாக நிரூபிக்க போராடிக்கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு, 'சகாப்தம்' திரைப்படம் வெளியானது.
பிரபல நடிகரும், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் தற்போது தமிழ் சினிமாவில் தன்னை ஒரு நடிகனாக நிரூபிக்க போராடிக்கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு, 'சகாப்தம்' திரைப்படம் வெளியானது.
கலவையான விமர்சனங்களை, பெற்று இந்தப்படம் பெற்றாலும் இது சண்முகப்பாண்டியனுக்கு பெரிய வெற்றியைக் கொடுக்கவில்லை இதைத் தொடர்ந்து வெளியான 'மதுரவீரன்' திரைப்படம் இவருக்கு ரசிகர்களிடம், சிறந்த நடிகர் என அந்தஸ்தை பெற்று தந்தது. இந்த படத்தில் கிராமத்து இளைஞனாக வாழ்ந்து நடித்திருந்தார் சண்முகப்பாண்டியன்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து, இவர் அவருடைய தந்தை விஜயகாந்த் உடன் இணைந்து 'தமிழன் என்று சொல்' என்கிற படத்தில் நடிப்பதாக கூறப்பட்டாலும், ஒரு சில காரணங்களால் இந்த படம் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சண்முக பாண்டியன் புதிதாக கமிட்டாகி நடித்து வரும் திரைப்படம் இந்த படத்தில் தன்னுடைய அப்பா பாணியிலேயே முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
இந்த படத்திற்காக தன்னுடைய உடலை மிகவும் ஃபிட்டாக மாற்றியுள்ளார் சண்முகப்பாண்டியன். மேலும் மித்திரன் படத்தில் சலா சலா என்கிற பாடலுக்கு இவர் நடனமாடிய சில புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு பாபா ஷங்கர் நடன அமைப்புகள் அமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது