விவாகரத்து சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்த வித்யா பாலன்......!!!
கோலிவுட்டில் புறக்கணிக்க பட்டு, பாலிவுட்டில் தனது வெற்றிக்கொடியை நாட்டியவர் நடிகை வித்யா பாலன்.
இவர் பிரபல கவர்ச்சி நடிகை சில்க் சுமிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்தது பிரபலமானவர், மேலும் இந்த படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார்.
இந்நிலையில் இவரும், இவரது கணவர் சித்தார்த் ராய் கபூரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிய உள்ளதாக ஒரு செய்தி வெளியாகியது.
விவாகரத்து தொடர்பாக தற்போது பேசியுள்ள வித்தியா பாலன், தனக்கு சித்தார்த் கபூரை சந்தித்த பிறகு தன திருமணம் மீது ஆசை வந்ததாகவும், மேலும் நாங்கள் சாதாரண கணவன் மனைவி போல இருவருவரும் இணைத்து விழாக்களில் கலந்து கொள்ளாததாலும், சேர்த்து செல்பி எடுத்து இணையதளங்களில் போடாததால் இது போன்ற வதந்திகள் பரவி வருவதாக தெரிவித்தார் .
மேலும் தனக்கும் தன் கணவருக்கும் எந்த பிரச்னையும் இல்லை என்றும், விவாகரத்து செய்தி முற்றிலும் பொய் என்றும் தெரிவித்துள்ளார்.