Take the thupparivalan moive 4th part - Mishkin ...

துப்பறிவாளன் படத்தை 4-ஆம் பாகம் வரை இயக்க உள்ளேன் என்று சேலத்தில் இயக்குநர் மிஷ்கின் தெரிவித்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கேரளா முதல்வா், டெல்லி முதல்வா் மற்றும் மேற்கு வங்க முதல்வர் என பல்வேறு முக்கிய அரசியல் தலைவா்களை சந்தித்து வருகிறாா்.

இது தொடா்பாக பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துகளை தொிவித்து வருகின்றனா். அந்த வகையில், இயக்குநா் மிஷ்கின் நாமக்கல் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டாா்.

அப்போது செய்தியாளா்களிடம், “மக்களுள் ஒருவராக இருந்து வருபவருக்கே அவா்களின் கஷ்டம் குறித்து தொியும். எனவே பத்து ஆண்டுகள் மக்கள் சேவையில் ஈடுபட்ட பின்னரே ஒருவா் அரசியலுக்கு வரவேண்டும். நடிகா் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது அவரது சொந்த விருப்பம். அது குறித்து நான் ஒன்றும் கூற முடியாது என்றார்.

அதன்பின்னர், சேலத்தில் துப்பறிவாளன் படம் குறித்து பேசிய மிஷ்கின், “துப்பறிவாளன் திரைப்படம் 2-வது வாரமாக வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.

இந்தப் படம் தமிழகம் மட்டுமல்ல உலக தமிழர்களால் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்பட்டு உள்ளது.

இந்த படத்தை தியேட்டருக்கு சென்று பார்த்து வரும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

வியாபார நோக்கத்துடன் மட்டுமல்லாமல் நல்ல படம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

துப்பறிவாளன் படத்தை 4-ஆம் பாகம் வரை இயக்க உள்ளேன்” என்று தெரிவித்தார்.