பிரபல பாடகி சுஜித்ரா நடிகர் தனுஷை எதிர்த்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு செய்தி தமிழ் திரையுலகத்தை சேர்ந்த அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.

மேலும் தன்னுடைய கையில் அடிபட்ட ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, இந்த காயத்திற்கு காரணம் தனுஷின் குழுவினர் என்றும், தனுஷ் தன்னிடம் எப்படி நடந்து கொண்டார் என விரைவில் அனைவர்க்கும் தெரிவிப்பேன் என்பது போல் அந்த செய்தி அமைந்துள்ளது.

ஒருவேளை இவருடைய ட்விட்டர் கணக்கை யாராவது ஹேக் செய்தார்களா என்பது குறித்து பலருக்கு சந்தேகம் இருந்தாலும் இது வரை சுஜித்ரா எந்த ஒரு தகவலும் வெளியிடவில்லை .... இந்த சந்தேகத்தை போக்க அவர் நேரில் வருவாரா..? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.