இந்தியாவே பயப்படும் அளவுக்கு அவள் படம் இருக்கும் - நடிகர் சித்தார்த் நம்பிக்கை…
இந்தியாவே பயப்படும் அளவுக்கு அவள் படம் இருக்கும் என்று நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
மிலிண்ட் ராவ் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் உருவாகி வரும் படம் அவள்.
இதில், ஆண்ட்ரியா ஹீரோயினாக நடித்துள்ளார்.
மேலும், சுரேஷ், அதுல் குல்கர்னி, அனிஷா விக்டர் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இப்படம் முழுக்க முழுக்க த்ரில்லர் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில், சித்தார்த், ஆண்ரியா, அதுல் குல்கர்னி ஆகியோர் உள்பட படக்குழுவினர் பங்கேற்றனர்.
அப்போது சித்தார்த், “கிட்டத்தட்ட 12 வருடத்திற்குப் பிறகு அதுல் குல்கர்னியுடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படத்தின் இயக்குனர் மிலிண்ட் ராவும், நானும், மணிரத்னத்திடம் உதவியாளராக பணியாற்றினோம். அப்போது இருவருக்குள்ளும் ஏற்பட்ட நட்பின் அடையாளமாக தற்போது அவள் என்ற த்ரில்லர் படம் உருவாகியிருக்கிறது.
ஹாலிவுட் படங்களில் சில படங்கள் மக்களை பயமுறுத்தும் அளவிற்கு இருக்கும். ஆனால், பாலிவுட் படங்கள் அப்படி இருந்ததில்லை.
இந்த நிலையில், இந்தியாவே பயப்படும் அளவிற்கு ஒரு படத்தை எடுக்க நினைத்தேன். அப்படி வந்த படம்தான் இந்த “அவள்”.
இப்படம் நிச்சயம் அனைவரையும் பயமுறுத்தும் படமாக இருக்கும். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.