சமீப காலமாக சின்னத்திரை நடிகர்கள், நடிகைகள் தற்கொலை செய்து கொள்வது மிகவும் அதிகரித்துவிட்டது. தற்போது மேலும் ஒரு இறப்பு சம்பவம் நடந்துள்ளது.
மும்பை அருகே மேற்கு வழி ரயில் தடத்தில் இன்று காந்திவிலி- போரிவிலி ரெயில் நிலையங்களுக்கு இடையே முதியவர் ஒருவர் அடிபட்டு உயிரிழந்து கிடந்துள்ளர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனே விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர் விசாரணையின் போது அவர் மின்சார ரயிலில் அடிபட்டு இறந்தாகவும் அவர் பிரபல பாலிவுட் சீரியல் நடிகர் முகேஷ் ராவல் என்பது தெரியவந்தது.
இவர் ஹிந்தி, குஜராத்தியில் டி.வி சீரியல்களில் நடித்துள்ளார். அவருக்கு வயது 66 என்றும் ஹிந்தி ராமாயணத்தில் விபீஷணாக நடித்ததன் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இறப்பு தற்கொலையா அல்லது கொலையா, என்ற கோனத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் .
