selvaraghavan : தனுஷ் ரூட்டை பின்பற்றும் செல்வராகவன்.... ‘நீங்களுமா’ என ஷாக் ஆன ரசிகர்கள்
செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் ‘நானே வருவேன்’ படத்திலும் தனுஷ் தான் ஹீரோவாக நடித்து வருகிறார். இதுதவிர இவர்கள் இருவரும் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் இணைந்து பணியாற்ற உள்ளனர்.
தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் படங்களுக்கு என மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. குறிப்பாக செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில் உருவாகும் படங்களுக்கு தனி மவுசு என்றே சொல்லலாம். இவர்கள் இருவரும் இதுவரை காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்களில் பணியாற்றி உள்ளனர்.
அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் ‘நானே வருவேன்’ படத்திலும் தனுஷ் தான் ஹீரோவாக நடித்து வருகிறார். இதுதவிர இவர்கள் இருவரும் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் இணைந்து பணியாற்ற உள்ளனர்.
இவ்வாறு பிசியான இயக்குனராக வலம் வரும் செல்வராகவன், தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணிக் காயிதம், விஜய்யின் பீஸ்ட் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். இப்படங்களின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக இதில் சாணிக்காயிதம் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தில் செல்வராகவன் கதையின் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக தேசிய விருது வென்ற நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் விரைவில் ஓடிடி-யில் வெளியாக உள்ளதாம். இந்த தகவலை செல்வராகவனும் உறுதிப்படுத்தி உள்ளார். இதைப் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், ‘உங்க தம்பி தான் அப்படினு பார்த்தா... நீங்களுமா’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஏற்கனவே நடிகர் தனுஷ் தனது ஜகமே தந்திரம், அட்ரங்கி ரே போன்ற படங்களை ஓடிடி-யில் வெளியிட்டார். அதே போல் அவர் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள மாறன் படமும் ஓடிடி-யில் தான் ரிலீஸாக உள்ளது. தற்போது செல்வராகவனும் தற்போது அதே ரூட்டை பின்பற்றி தனது சாணிக் காயிதம் படத்தை ஓடிடி-யில் வெளியிட உள்ளார்.