தெலுங்கு சினிமாவில் குறிப்பிட்ட நபரை திட்டும் தொனியில்தான் அந்த டீ ஷர்ட்டை அணிந்தார் சமந்து என்கிறார்கள் நெருங்கிய தோழிகள்.. யார் அவர்..?

  • இந்தி சினிமாவில் ஆயிரம் பஞ்சாயத்துகள் இருந்தாலும் கூட பல ஹீரோக்கள், ஹீரோயின்கள் ஒன்று கூடி ஒரே படத்தில் நடிப்பது வாடிக்கை. அல்லது கெஸ்டாகவாவது வந்து போவார்கள். தமிழ் சினிமாவில் இல்லாத அந்த வழக்கத்தை அனிருத் தலைமுறை உருவாக்கிக் கொண்டுள்ளது. அந்த வகையில் விஜய்யின்பீஸ்ட்படத்தின் ஓப்பனிங் பாடல் மேக்கிங் வீடியோவில் சிவகார்த்திகேயன் வருகிறாராம். ஆக்சுவலி அவர்தான் அந்தப் பாடலை எழுதியவர்.

(அப்படியே தளபதி காம்போவுல ஒரு படம் பண்ணுமா ரெமோ)

  • உலக காதலர் தினமான 14-க்கு பின், உலக காவலன் தினமாக அஜித்தின்வலிமைபிப்ரவரி 24-ம் தேதி ரிலீஸாகிறது என்று .கே.வின் ரசிகர்கள் இப்போதே பஞ்ச் டயலாக்கில் பின்னி எடுக்க துவங்கியுள்ளனர். மேலும் வலிமைக்கு மிக கிராண்டான ஓப்பனிங்கை கொடுக்க திட்டமிட்டுள்ளனர். அதற்குள் எப்படியும் நூறு சதவீதம் பார்வையாளர்களுடன் சினிமா தியேட்டர்கள் இயங்க துவங்கிவிடும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு.

(ஆனா அஜித்ட்ட கேட்டால், பாதுகாப்பா தள்ளி தள்ளி உட்கார்ந்து படம் பாருங்கப்பா!ன்னு சொல்வார்)

  • சமந்தா மிக மோசமான கெட்டவார்த்தை பொறிக்கப்பட்ட டீ ஷர்ட்டை அணிந்து வலம் வந்த விவகாரம் வேறு லெவலில் கதைக்கப்படுகிறது. அதாவது தெலுங்கு சினிமாவில் ஒரு குறிப்பிட்ட நபரை திட்டும் தொனியில்தான் சமந்து இப்படி சம்பந்தமே இல்லாமல் கேவலமான வார்த்தைகளுடன் கூடிய டீ ஷர்ட்டை அணிந்தார் என்கிறார்கள் அவரது தோழிகள். நாக சைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் இடையில் சமீபத்தில் சூழ்நிலை கொஞ்சம் சுகமானது. ஆனால் இதை ஒரு நபர் இடையில் புகுந்து குழப்பிவிட்டாராம். அவரை திட்டவே இந்த டீ ஷர்ட்டாம்.

(அதை தெலுங்குல திட்டியிருந்தா இன்னும் சிறப்பா இருந்திருக்குமே)

  • தமிழ்நாட்டுக்கு ஓடிடியில் சினிமா பார்க்கும் அனுபவத்தை அறிமுகப்படுத்தியதில் மிக முக்கிய பங்கு சூர்யாவுக்கு உண்டு. முதல் லாக்டவுன் துவங்கியதும், தன் மனைவி பிரதான ரோலில் நடித்தபொன்மகள் வந்தாள்எனும் படத்தை ஓடிடியில் வெளியிட்டார். ஆனால் அது ஃபிளாப். ஆனால் தனது நடிப்பில் உருவாகிய சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் என இரு படங்களை ஓடிடியில் வெளியிட்டார். இரண்டுமே சூப்பர் ஹிட். தியேட்டர் தொழிலை சூர்யா நசுக்குவதாக தியேட்டர் உரிமையாளர்கள் கடும் கடுப்பில் இருந்த நிலையில் இதோ நீண்ட இடைவெளிக்குப் பின் தியேட்டரில் வருகிறார் சூர்யா. எதற்கும் துணிந்தவன்! மூலம்.