சமந்தாவை வெறுப்பேற்ற சித்தார்த் போட்ட ட்வீட்....!!!
கடந்த இரண்டு வருடத்திற்கு முன், சமந்தாவும் நடிகை சித்தார்த்தும் காதலித்து வருவதாக கூறப்பட்டது, இருவரும் திருமணம் செய்ய போவதாக ஒரு சில தகவலும் வெளியாகியது.
ஆனால் இருவரும் ஒரு சில கருத்து வேறுபாடுகள் காரணாமாக பிரிந்தனர். சித்தார்த்தை பிரிந்த பின் தான் சமந்தா நாகசைதன்யாவை காதலித்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகை சமந்தாவிற்கும் நடிகர் நாக சைதன்யாவை நேற்று முந்தினம் , ஹைதராபாத்தில் உள்ள ஒரு நச்சத்திர ஓட்டலில் இவர்களுடைய நிச்சயதார்த்தம் பிரமாண்டமாக நடைபெற்றது.
தற்போது சித்தார் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை ஷேர் செய்து நம்ம கருத்து என கூறியுள்ளார், இதில் ‘காதல் மட்டுமே போதும், வெறுப்பது மிகவும் கடினம்’ என்பது போல் தெரிவித்துள்ளார். மேலும் இது சமந்தாவை வெறுப்பேற்றுவதற்காக சித்தார்த் இப்படி போட்டதாக கூறப்படுகிறது.