பிரபாஸின் சலார்.. அவருக்கு ஸ்டண்ட் டபுளாக நடித்த கலைஞர் - வெளியான தலை சுற்றவைக்கும் அவர் சம்பள விவரம்!
Prabhas Stunt Double Salary : பிரபல நடிகர் பிரபாஸ் அவர்கள் தனது சலார் படத்தை தொடர்ந்து, கல்கி மற்றும் ராஜா சாப் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார்.
தமிழில் இதுவரை நேரடியாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை என்றாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை கொண்ட நடிகர் தான் பிரபாஸ். தெலுங்கு திரை உலகின் முன்னணி ஆக்சன் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரபாஸ் அவர்களுடைய நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பாகுபலி திரைப்படம், உலக அளவில் இவருடைய புகழை கொண்டு சேர்த்தது.
ஆனால் அந்த திரைப்படத்திற்கு பிறகு இவருடைய நடிப்பில் வெளியான சகோ, ராதே ஷியாம் மற்றும் ஆதிபுருஷ் போன்ற திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு வெளியான பிரசாந்த் நீலின் சலார் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. உலக அளவில் இந்த திரைப்படம் நல்ல வசூலையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மலைக்கோட்டை வாலிபனோடு மோதும் ஆர்.ஜே பாலாஜி - இந்த வாரம் வெள்ளித்திரையை கலக்க வரும் மூவிஸ் லிஸ்ட்!
தொடர்ச்சியாக நடிகர் பிரபாஸ் அவர்கள் கல்கி மற்றும் ராஜா சாப் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகர் பிரபாஸ் ஒரு மிகப்பெரிய ஆக்சன் ஹீரோவாக வளர்ந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவருடைய ஸ்டண்ட் டபுள் குறித்த சில தகவல்கள் தற்பொழுது வெளியாகி உள்ளது. உச்ச நடிகர்களாக இருக்கும் பிரபாஸ் போன்ற நடிகர்கள் சிலர் தங்களுக்கென்றே பிரத்யேகமாக சில ஸ்டாண்ட் கலைஞர்களை பணியில் அமர்த்துவார்கள்.
ரிஸ்க்கான சண்டை காட்சிகளில் அவர்கள் தான் டூப் போடுவார்கள், அதுபோல தான் பிரபாஸ் அவர்களுக்கும் ஒரு ஸ்டண்ட் டபுள் உள்ளார். அவர் ஒருநாள் ஷூட்டிங்கில் நடிக்க சுமார் 20 முதல் 30 லட்சம் ரூபாய் வரை சம்பளமாக பெறுகிறார் என்று கூறப்படுகிறது. ஒரு படத்திற்கு பிரபாஸ் உடன் இணைந்து அவர் 20 முதல் 30 நாட்கள் பணிபுரிவாராம்.
ஆகவே அவர் ஒரு படத்துக்கு சுமார் ஒன்பது முதல் 10 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகின்றார் என்று கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை என்றாலும், தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு கூட அந்த அளவிற்கு சம்பளம் வாங்கவில்லை. சலார் படத்தை பொறுத்தவரை பிரபாஸ் 100 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றார் என்று கூறப்படுகிறது.