sai pallavi got kajal agarwal place
பொதுவாகவே தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற படங்களுக்குத் தான் இரண்டாவது பாகம் எடுப்பது வழக்கம். ஆனால் கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில், நடிகர் தனுஷ், காஜல் அகர்வால் நடித்து வெளியாகி சுமாரான விமர்சனங்களைப் பெற்ற திரைப்படம் மாரி.
எனினும் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் எடுக்கப்படும் என இந்தப் படத்தின் இயக்குனர் பாலாஜி மோகன் சமீபத்தில் சமூக வலைதளத்தில் அறிவித்தார்.
இந்நிலையில் இந்தப்படத்தை தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வொன்டர் பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிகை சாய்பல்லவி கமிட் ஆகியுள்ளார். மேலும் கிருஷ்ணா, டோவினா தாமஸ், வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ சங்கர், வினோத், அஜய் கோஷ் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.
மாரி 2 படத்தின் இரண்டாம் பாகத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தனுஷ் - யுவன் சங்கர் ராஜா கூட்டணி 10 வருடங்களுக்கு பிறகு அமைவதால் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மாரி 2 படத்தின் படப்பிடிப்பு இம்மாதத்தில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
