Asianet News TamilAsianet News Tamil

ராணா - மிஹீகா திருமணத்தில் புதிய சிக்கல்... கல்யாண தேதியுடன் வெளியான அதிகாரப்பூர்வ தகவல்...!

திருமணத்திற்கு வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும், கொரோனா பிரச்சனைகள் எல்லாம் முடிந்த பிறகு பார்ட்டி அல்லது வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 
 

Rana Daggubati Miheeka Bajaj Wedding with only 30 members
Author
Chennai, First Published Aug 5, 2020, 5:43 PM IST

இயக்குனர் எஸ்.எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், வெளியான “பாகுபலி” படத்தில், பல்வாள் தேவனாக மிரட்டி ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் பெற்றவர் ராணா. நடிகர் என்பதையும் தாண்டி, பட தயாரிப்பாளர், விஷ்வல் எபெக்ட் சூப்பர்வைசர், தொகுப்பாளர், விநியோகஸ்தர் என திரையுலகில் தன்னுடைய திறமையை நிரூபித்து வருகிறார். பல ஆண்டுகளாக முரட்டு சிங்கிளாக சுற்றி வந்த ராணா, மே12ம் தேதி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

Rana Daggubati Miheeka Bajaj Wedding with only 30 members

 

இதையும் படிங்க: டாப்லெஸில் தாறுமாறாக போஸ் கொடுத்த ஹன்சிகா... குஷியான ரசிகர்களுக்கு விழுந்த குட்டு...!

தொழிலதிபரும், மாடலுமான மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் சோசியல் மீடியாவில் போட்டோவுடன் அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இதனையடுத்து இருவீட்டாரும் சந்தித்து பேசக்கூடிய ரேகா நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மாப்பிள்ளை கெட்டப்பில் ராணாவும், பட்டுப்புடவையில் மிஹீகாவும் சும்மா தகதகவென ஜொலித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.

Rana Daggubati Miheeka Bajaj Wedding with only 30 members

தற்போது ராணா - மிஹீகாவின் திருமணம் வரும் 8ம் தேதி ஐதராபாத்தில் நடக்க உள்ளது. முதலில் ஐதராபாத்தில் உள்ள பிரம்மாண்ட அரண்மனையில் நடக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், ராணா குடும்பத்தினருக்கு  சொந்தமான ராமநாயுடு ஸ்டுடியோவில் திருமணம் நடக்கப்போகிறதாம். அந்த திருமணத்தில் 30 பேர் மட்டுமே பங்கேற்க உள்ளனர். இரு வீட்டார் மட்டுமே கலந்து கொள்ள உள்ளதாகவும், இதனால் நெருங்கிய நண்பர்கள், திரைப்பிரபலங்கள் என யாருக்கும் அழைப்பு இல்லை என்றும் ராணாவின் தந்தை சுரேஷ் பாபு தெரிவித்துள்ளார்.

Rana Daggubati Miheeka Bajaj Wedding with only 30 members

 

இதையும் படிங்க: பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று... தனியார் மருத்துவமனையில் அனுமதி...!

மேலும் கொரோனாவின் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் திருமணத்தை எளிமையாக நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், திருமணம் நடைபெற உள்ள இடத்தில் சானிடைசர் வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். திருமணத்திற்கு வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும், கொரோனா பிரச்சனைகள் எல்லாம் முடிந்த பிறகு பார்ட்டி அல்லது வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios