நடிகர் தனுஷும் ஐஸ்வரியா ரஜினிகாந்தும் விவகாரத்து செய்யப்போவதாக இருவரும் கூட்டாக அறிவித்துள்ளனர். 

நடிகர் தனுஷும் ஐஸ்வரியா ரஜினிகாந்தும் விவகாரத்து செய்யப்போவதாக இருவரும் கூட்டாக அறிவித்துள்ளனர். தனுஷ் அவருடைய மனைவி இயக்கத்தில் 3 படத்தில் நடித்த போது சுருதிஹாசன் உடன் கிசு கிசுக்கப்பட்டு ரஜினிகாந்த் குடும்பத்தில் பெரும் சர்ச்சையாகி பின் சமரசமானதாக பரபரப்பாக பேசப்பட்டது. இதன் பின்பு தொடர்ந்து நடிகைகளுடன் சர்ச்சையில் சிக்கி வந்த தனுஷ், நடிகை அமலாபால், தொகுப்பாளினி டிடி ஆகியோர் விவாகரத்துக்கு தனுஷ் தான் காரணம் என பரபரப்பாக பேசப்பட்டது. இதில் நடிகை அமலாபால் விவாகரத்துக்கு பின் தொடர்ந்து பல நடிகைகளுடன் கிசு கிசுக்கபட்டார் தனுஷ், மேலும் இரவு பார்ட்டிகளில் அவர் நடிகைகளுடன் பங்கு பெரும் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் தனுஷ் விவகாரம் முடிவே இல்லாமல் தொடர்ந்து சர்ச்சையாகி வந்த நிலையில், பலமுறை தனுஷ் மனைவி எச்சரித்தும், நான் அபப்டியெல்லாம் இல்லை, இனிமேல் இதுமாதிரி பிரச்சனை வராது என சமாதனம் செய்து விட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கி வந்துள்ளார். இந்த நிலையில் தற்போது ஐஸ்வரியாவை விவாகரத்து செய்யப்போவதாக நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார். அதேபோல் ஐஸ்வரியா ரஜினிகாந்தும் தனது இஸ்டாகிராம் பக்கத்தில் கடித்ததை ஷேர் செய்து விவாகரத்தை உறுதி செய்துள்ளார். இதுக்குறித்த தனுஷின் கடிதத்தில், நண்பர்கள், தம்பதிகள், பெற்றோர்கள் மற்றும் நலம் விரும்பிகள் என 18 வருடங்கள் ஒன்றாக இருந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு மற்றும் அனுசரிப்பு என இருந்தது.

இன்று நாங்கள் எங்கள் பாதைகள் பிரிக்கும் இடத்தில் நிற்கிறோம். ஐஸ்வர்யாவும் நானும் ஒரு ஜோடியாக பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனியுரிமையை எங்களுக்கு வழங்கவும் என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல் ஐஸ்வரியா ரஜினிகாந்து ஷேர் செய்திருந்த கடித்தத்திலும் கிட்டத்தட்ட அதயே தான் குறிப்பிட்டிருந்தார். நன்றாக் சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் என்ன ஆனாது? ஏன் இந்த முடிவுக்கு இருவரும் வந்தனர் என்று ரசிகர் மண்டயை பிய்த்து கொள்கின்றனர். இதனிடையே ரஜினி இன்று காலை முதல் போயஸ் வீட்டில் இல்லை. அவர் எங்கிருக்கிறார் என்றும் தற்போது வரை யாருக்கும் தெரியவில்லை என கூறப்படுகிறது. அவரது குடும்பத்தில் மீண்டும் ஒரு விவகாரத்து அவரை மனம் கலங்க செய்துள்ளது. இதை அவர் எப்படி எதிர்கொள்வார் என்று தெரியவில்லை. பாவம் அவர்.