Asianet News TamilAsianet News Tamil

கந்தசஷ்டி விவகாரம்... தமிழக அரசை பாராட்டிய சூப்பர் ஸ்டாருக்கு நன்றி கூறிய அமைச்சர்!

காலம் காலமாக கடவுள் முருகனின் பக்தர்களால் புனிதமாக போற்றப்பட்டு வரும் கந்த சஷ்டி கவசத்தில், தவறான வார்த்தைகள் உள்ளதாக கூறி, கறுப்பர் கூட்டம் என்கிற ஊடகம் ஒன்று, மிகவும் கேவலமாக கந்த சஷ்டி கவசத்தை விமர்சித்தததற்கு தமிழக அரசு எடுத்த நடவடிக்கைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய நன்றிகளை தெரிவித்திருந்தார்.
 

minister velumani thanking for rajinikanth twit
Author
Chennai, First Published Jul 22, 2020, 7:57 PM IST

காலம் காலமாக கடவுள் முருகனின் பக்தர்களால் புனிதமாக போற்றப்பட்டு வரும் கந்த சஷ்டி கவசத்தில், தவறான வார்த்தைகள் உள்ளதாக கூறி, கறுப்பர் கூட்டம் என்கிற ஊடகம் ஒன்று, மிகவும் கேவலமாக கந்த சஷ்டி கவசத்தை விமர்சித்தததற்கு தமிழக அரசு எடுத்த நடவடிக்கைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய நன்றிகளை தெரிவித்திருந்தார்.

கறுப்பர் கூட்டத்தின் இந்த விமர்சித்து, பல இந்தி மக்களின் மனதை புண் படுத்தும் விதத்தில் அமைந்ததால் இதற்க்கு எதிராக பலர் தொடர்ந்து தங்களுடைய கண்டனத்தை வெளிப்படுத்தி வந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக உடல் உறுப்புகளை பற்றி இதில் கூறப்பட்டுள்ளதில் என்ன ஆபாசம் இருக்கிறது என பல்வேறு, விளக்கமும் கொடுத்து வந்தனர். 

minister velumani thanking for rajinikanth twit

இதையடுத்து கறுப்பர் கூட்டம் சேனல் மற்றும் அதன் நிர்வாகிகள் மீது, மத கலவரத்தை துாண்ட முயற்சி செய்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து செந்தில்வாசன், சுரேந்தர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, செந்தில்வாசனிடம் நடத்திய விசாரணையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு வீடியோ தயாரிக்கும் ஸ்டுடியோவாகச் செயல்பட்டு வந்த சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்திற்கு மத்திய குற்றப் பிரிவு போலீசார் சீல் வைத்தனர்.

minister velumani thanking for rajinikanth twit

தமிழக அரசு விரைந்து எடுத்த இந்த நடவடிக்கைக்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தி கொந்தளிக்கச் செய்த, இந்த  ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்கு தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள். இனிமேலாவது மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்... ஒழியணும்.. எல்லா மதமும் சம்மதமே!!! கந்தனுக்கு அரோகரா!!! என பதிவிட்டிருந்தார்.

minister velumani thanking for rajinikanth twit

இந்த நிலையில் கந்தசஷ்டி விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கையை பாராட்டிய ரஜினிகாந்திற்கு அமைச்சர் எஸ் பி வேலுமணி தன்னுடைய நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடியார் தலைமையிலான தமிழக அரசு சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் யாராயினும் அரசியல் செய்யாமல் உடனடியாக கடும் நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கு அமைதியை நிலைநாட்டி வருகிறது.

minister velumani thanking for rajinikanth twit

அவ்வகையில் கவசமாக இருந்து காக்க என்று கந்தர் அருள்வேண்டி கோடிக்கணக்கான தமிழர்கள் பாடும் பாடலை நிந்தனை செய்தோர் மீதும் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்க முயன்றோர் மீதும் மாண்புமிகு முதல்வர் எடப்பாடியார் அவர்களின் தலைமையிலான அரசு. உடனடியாக நடவடிக்கை எடுத்தமைக்கு பாராட்டு தெரிவித்து பாகுபாடு இல்லா சமய நல்லிணக்கத்திற்கு குரல் கொடுத்துள்ள திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என ட்விட் செய்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios