நயன்தாரா குறித்த கமெண்ட்... லட்சுமி ராமகிருஷ்ணனை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்...!
தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகை, தொகுப்பாளர் என பல்வேறு துறைகளிலும் கால் பதித்து சாதித்து வருபவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் பிரபல தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கி வரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தார்.
தற்போது இவர் நடிகை நயன்தாரா நடித்து வெளியாகியுள்ள 'அறம்' படத்தைப் பார்த்துவிட்டு எப்போதும் மனதில் தோன்றும் கருத்துக்களை தெரிவிப்பது போல் இந்தப் படத்தைப் பற்றியும் இந்தப் படத்தில் நயன்தாராவின் நடிப்பைப் பற்றியும் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்... 'அறம்' திரைப்படம் தனக்கு மிகவும் பிடித்திருந்தது என்றும் அதோடு நிறுத்தாமல் ரசிகர்கள் கோபப்படும் அளவிற்கு ஒரு சில கருத்துகளையும் தெரிவித்துள்ளார்.
அது என்னவென்றால், நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள், அவரின் திறமைகளை நாங்கள் பார்க்கவிடாமல் செய்யாதீர்கள். மேலும், அறம் படத்தின் கிளைமேக்ஸில் நயன்தாராவின் காலில் விழும்படி ஒரு காட்சி இருக்கின்றது. பெற்றோர்களைத் தவிர்த்து வேறு யார் காலிலும் விழக்கூடாது என்றும் கூறியுள்ளார். மேலும் அந்தக் காட்சியைப் பார்க்கும் போது எனக்கு மிகவும் பயமாக இருந்தது, தமிழகம் காலில் விழும் பழக்கத்திலிருந்து மீள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இவரின் இந்தக் கருத்துக்கு நயன்தாரா ரசிகர்கள் மட்டும் இன்றி பலரும் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். காரணம்... இவர் நடத்தி வரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பலர் இவருடைய காலில் நிஜத்தில் விழுந்துள்ளனர் அவர்கள் விழும்போது இது போன்ற கருத்தை வெளியிட வேண்டியது தானே. நடிப்புக்காக நயன்தாரா காலில் விழுந்ததைப் பார்க்கும் போதுதான் கருத்து தோன்றுகிறதா என வெளுத்து வாங்கியுள்ளனர் ரசிகர்கள்.