கொடூர சம்பவம்... போட்டோ ஷூட் எடுப்பதாக அழைத்து சென்று 3 நாள் சீரழிக்கப்பட்ட மாடல்! போலீசில் பரபரப்பு புகார்!
மாடல் அழகி ஒருவரை, போட்டோ ஷூட் எடுப்பதாக அழைத்து சென்று தொடர்ந்து மூன்று நாட்கள் சீரழித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாடல் அழகி ஒருவரை, போட்டோ ஷூட் எடுப்பதாக அழைத்து சென்று தொடர்ந்து மூன்று நாட்கள் சீரழித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூகத்தில், இப்படியெல்லாம் நடக்குமா? என்று பயந்து நடுங்கும் அளவுக்கு பல சம்பவங்கள் நடந்து வருகிறது. அந்த வகையில் தற்போது கேரளாவை மாடல் அழகி ஒருவருக்கு நடந்துள்ள கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொச்சியை சேர்ந்தவரான மாடல் அழகி ஒருவரை, விளம்பரம் ஒன்றிக்கு முன்னதாக போட்டோ ஷூட் எடுக்க வேண்டும் என ஆலப்புழாவை சேர்ந்த சலீம்குமார்(33) என்பவர் அணுகியுள்ளார். இதற்க்கு மாடல் அழகியும் சம்மதம் தெரிவித்ததால், கொச்சியில் இடத்திரா பகுதியில் உள்ள லாட்ஜில் வைத்து போட்டோ ஷூட் எடுப்பதாக அங்கு அழைத்து சென்றுள்ளார்.
மாடல் அழகி லாட்ஜிக்கு வந்ததும், சலீம்குமார் அவருக்கு ஜூசில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார்.இதனை குடித்ததும் மயங்கிய மாடல் அழகியை... தொடர்ந்து மூன்று நாட்கள் மயக்கத்தில் வைத்தே, 3 நாட்கள் கதற கதற சீரழித்துள்ளனர். பின்னர் மாடல் அழகியை அங்கிருந்து வெளியே அனுப்பியுள்ளனர்.
தற்போது பாதிக்கப்பட்ட மாடல் அழகி இதுகுறித்து கொச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் இந்த சம்பவத்திற்கு காரணமான சலீம் குமார் என்பதை கைது செய்ததோடு, ஷமீர், அஜ்மல் மற்றும் லாட்ஜ் உரிமையாளர் ஒருவரையும் தேடி வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.