’பரியேறும் பெருமாள்’கள் பட்டியலில் இடம்பிடித்தார் கமல்!
’அட இன்னுமா பாக்கலை?’ என்று சில படங்களுக்கு மவுத் டாக் பப்ளிசிட்டி கிடைக்கும். அந்த வரிசையில் சமீபத்தில் ரிலீஸான ‘மேற்குத் தொடர்ச்சி மலை’க்குப் பிறகு ‘பரியேறும் பெருமாள்’ படம் இடம் பிடித்திருக்கிறது.
’அட இன்னுமா பாக்கலை?’ என்று சில படங்களுக்கு மவுத் டாக் பப்ளிசிட்டி கிடைக்கும். அந்த வரிசையில் சமீபத்தில் ரிலீஸான ‘மேற்குத் தொடர்ச்சி மலை’க்குப் பிறகு ‘பரியேறும் பெருமாள்’ படம் இடம் பிடித்திருக்கிறது.
’படம் நல்லா இருக்குன்னு கேள்விப்பட்டேன். அப்புறமா பாத்துட்டு சொல்றேங்ணா’ என்று வருங்கால அரசியல்வாதி விஜய் போல தள்ளிப்போட்டால் நன்றாக இருக்காது என நிகழ்கால அரசியல்வாதி கமல் நினைத்தாரோ என்னவோ, இன்றே ‘பரியேறும் பெருமாள்’ படம் பார்த்து தனது பரவசக் கருத்தையும் பா.ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜிடம் பகிர்ந்தார்.
இன்று மதியம் தனது மக்கள் நீதி மய்ய நீதிமான்கள் சிலருடன் ‘பரியேறும் பெருமாள்’ படம் பார்த்த கமல், தயாரிப்பாளர் பா.ரஞ்சித் இயக்குநர் மாரி.செல்வராஜ் இருவரையும் கட்டித் தழுவிப் பாராட்டி ‘உங்கள் இருவருக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துகள்.
நண்பர்கள் கடந்த நாலைந்து தினங்களாகவே போன் செய்து இன்னுமா படம் பார்க்கலை? என்று நச்சரித்துக் கொண்டிருந்தார்கள். எனவே இனியும் தள்ளிப்போட வேண்டாமே என்று கிளம்பிவந்துவிட்டேன். இந்த முயற்சியையும் பயிற்சியையும் எப்போதும் எதற்காகவும் கைவிட்டுவிடாதீர்கள்’ என்றார்.
பெருமாளை தரி’சிக்காதவர்கள்’ பட்டியலில் இப்போதைக்கு கபாலி என்கிற காலா மட்டுமே மிச்சமிருக்கிறார்.