julie felt love in famous anchor

நான்... வீர தமிழச்சி... என சொல்லிக்கொண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் ஜூலி. ஒரு சில வாரங்களில் இவரது சுயரூபம் பிக் பாஸ் வீட்டின் உள்ளே இருந்த போது முழுமையாக வெளிப்பட்டது. இதனால் இவரை பொது மக்கள் மட்டும் அல்ல இவருடைய நண்பர்கள் மற்றும் பெற்றோரே வெறுக்கும் நிலை இருந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் இவர் சமீபத்தில் பிக் பாஸ் கொண்டாட்டம் என்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அந்த தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருக்கும் ரக்சனிடம் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் தங்களுடைய தொலைபேசி எண்ணையும் பரிமாறிக்கொண்டார்களாம்.

பின் ஜூலி தொடர்ந்து ரக்சனிடம் பேசி வந்துள்ளார். தற்போது இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள மால் மற்றும் பல இடங்களில் ஒன்றாகவே சுற்றி வருகின்றனர் இதனால் இவர்கள் இருவரும் காதலிப்பதாகக் கூறப்படுகிறத

தற்போது கலா மாஸ்டர் தயவால் பிரபல தொலைக்காட்சியில், இவருக்கு தொகுப்பாளினியாகக் கிடைத்த வேலையையும் இவர் இது போன்ற செயல்களால் இழந்து விடுவாரோ என்று அவரது நட்பு வட்டம் கிசுகிசுக்கிறது. மேலும், ஜூலியின் பெற்றோரும் இவற்றால் மிகுந்த மன உளைச்சலில் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஜூலியின் குணத்தைப் பற்றி அறிந்து கொண்ட பின் அவருடைய தோழிகள் மற்றும் தோழர்கள் பலர் இவரை விட்டு ஒதுங்கி விட்டதாகக் கூறுகின்றனர்.