Anju : அப்பாவை விட வயதில் மூத்த நடிகர்.. 4வது மனைவியான அஞ்சு.. 4 மாத கர்ப்பிணியாக இருந்தபோது பிரிந்தது ஏன்?
Veteran Actress Anju : தனது 4வது வயது முதல் கலை உலகில் பயணித்து, தனது வாழ்க்கையில் மிகப்பெரிய சோகத்தை அனுபவித்து, அதை தாங்கிக் கொண்டு பயணித்து வரும் ஒரு மிகச் சிறந்த நடிகை தான் அஞ்சு.
கடந்த 1975ம் ஆண்டு பிறந்த பிரபல நடிகை அஞ்சு, தமிழில் 1979ம் ஆண்டு வெளியான "உதிரிப்பூக்கள்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கினார். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக மட்டுமே 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் அஞ்சு.
தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். நாயகியாகவும் ஒரு சில திரைப்படங்களில் நடித்த அஞ்சு, தமிழில் இறுதியாக கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான "மதயானை கூட்டம்" என்கின்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார்.
கடந்த 1996ம் ஆண்டு அஞ்சுவிற்கு 19 வயது இருக்கும் பொழுது பிரபல தெலுங்கு திரையுலக நடிகர் டைகர் பிரபாகர் அவர்களை இவர் திருமணம் செய்து கொண்டு. பின் நான்கு மாத கர்ப்பிணியாக இருந்த பொழுது அவரை பிரிந்து வந்தார். திருமணமான ஒரே வருடத்தில் மீண்டும் தனது பெற்றோரிடம் திரும்பிய நடிகை அஞ்சு, இன்றுவரை தனது பெற்றோருடன் தான் வாழ்ந்து வருகின்றார். அவருக்கு அர்ஜுன் பிரபாகர் என்கின்ற மகனும் உள்ளார், அஞ்சுவிற்கு வயது 49
சில வருடங்களுக்கு முன்பு தனது கல்யாணம் குறித்து மனம் திறந்த நடிகையின் அஞ்சு, தனக்கு 19 வயது இருக்கும் பொழுது பிரபல நடிகர் டைகர் பிரபாகர் அவர்களை தான் விருப்பத்துடன் தான் திருமணம் செய்து கொண்டதாகவும், ஆனால் அவரை திருமணம் செய்து கொண்ட பிறகு, கொஞ்சம் காலம் கழித்து தான் அவருக்கு ஏற்கனவே மூன்று திருமணங்கள் முடிந்திருப்பதும், தன்னைவிட வயதில் மூத்த மகள்கள் இருப்பதும் தெரியவந்தது என்று கூறியுள்ளார்.
ஆகையால் திருமணமான ஒரே வருடத்தில் அவரை விட்டு பிரிந்தேன். அப்பொழுது நான் நான்கு மாத கர்ப்பிணி, பின் சில ஆண்டுகள் கழித்து கடந்த 2001ம் ஆண்டு அவர் இறந்த செய்தி மட்டும்தான் எனக்கு கிடைத்தது என்றார் அஞ்சு. நடிகர் டைகர் பிரபாகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முத்து திரைப்படத்தில் வில்லனாக நடித்திருப்பார்.