Asianet News TamilAsianet News Tamil

அநியாயமா கொன்னுட்டீங்களே... சல்மான் கான், கரண் ஜோஹர் உருவபொம்மை எரிப்பு... கொந்தளித்த சுஷாந்த் ஃபேன்ஸ்...!

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் சிலர் சுஷாந்தின் வளர்ச்சி பிடிக்காமல் அவரது படவாய்ப்புகளை தட்டிப்பறித்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது.

Fans of Sushant ingh Rajput Protest Against Salman khan and karan Johar
Author
Chennai, First Published Jun 17, 2020, 6:50 PM IST

பாலிவுட்டின் முன்னணி நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஞாயிற்றுகிழமை மும்பை பாந்த்ராவில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 34 வயதே ஆன சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பாலிவுட்டில் மிகப்பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்படும் நிலையில், இதுவரை அவருடைய வீட்டில் இருந்து கடிதம் ஏதும் கைப்பற்றப்படாதது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

Fans of Sushant ingh Rajput Protest Against Salman khan and karan Johar

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யான சஞ்சய் நிருபம் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டிருந்தார்.கடந்த ஆண்டு சுஷாந்த் சிங் நடிப்பில் வெளியான  சிச்சோரே படத்திற்கு பிறகு அவர் 7 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்ததாகவும், கடந்த 6 மாதங்களில் சுஷாந்த் கைவசம் இருந்த அத்தனை படங்களும் கைநழுவி போனதாகவும் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். பாலிவுட்டில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் சிலர் சுஷாந்தின் வளர்ச்சி பிடிக்காமல் அவரது படவாய்ப்புகளை தட்டிப்பறித்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. இதனால் சுஷாந்திற்கு கூடுதல் மன அழுத்தம் ஏற்பட்டிருக்கலாம் தகவல்கள் வெளியானது. 

Fans of Sushant ingh Rajput Protest Against Salman khan and karan Johar

 

இதையும் படிங்க: அடிக்கிற வெயில் போதாதுன்னு அனலை கிளப்பும் ஷாலு ஷம்மு... குளியல் தொட்டிக்குள் குட்டை உடையில் அட்ராசிட்டி...!


இதனிடையே சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை விவகாரத்தில் அதிரடி திருப்பமாக சல்மான் கான் உள்ளிட்ட 8 பாலிவுட் பிரபலங்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.பாலிவுட் பிரபலங்களான சல்மான் கான், சஞ்சய் லீலா பன்சாலி, ஏக்தா கபூர், கரண் ஜோஹர் உள்ளிட்ட 8 பேர் மீது, பீகார் மாநிலம் முசாபர்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதீர் குமார் ஓஜா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். 

Fans of Sushant ingh Rajput Protest Against Salman khan and karan Johar

 

இதையும் படிங்க: “இதை செய்தாலே கொரோனாவைக் கட்டுப்படுத்தலாம்”... முதலமைச்சருக்கு இயக்குநர் சேரன் வைத்த அதிரடி கோரிக்கை...!

சுஷாந்தை படங்களில் இருந்து சுஷாந்தை நீக்கி அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி தற்கொலைக்கு தூண்டியதாக அவர்கள் மீது குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அந்த 8 பேர் மீதும் மிரட்டல், தற்கொலைக்கு தூண்டிதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த செய்தியைக் கேள்விப்பட்ட சுஷாந்த் ரசிகர்கள் அனைவரும் கொந்தளித்து போயுள்ளனர். இதுவரை பாலிவுட் பிரபலங்களையும், அவர்களுடைய கண் துடைப்பு பதிவுகளையும் சோசியல் மீடியாவில் கழுவி ஊத்தி வந்த அவர்கள், இன்று நடு ரோட்டில் இறங்கி போராட்டத்தில் குதித்துள்ளனர். 

Fans of Sushant ingh Rajput Protest Against Salman khan and karan Johar

இதையும் படிங்க:  ஸ்ருதி ஹாசனின் ஒருநாள் சம்பளம் இத்தனை லட்சமா?... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சங்கதி...!

சுஷாந்தின் சொந்த ஊரான பாட்னாவைச் சேர்ந்த ரசிகர்கள் கரண் ஜோஹர் மற்றும் சல்மான் கானின் உருவபொம்மைகளை தீயிட்டு கொளுத்தி தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios