பிரபல தயாரிப்பாளருக்கு கொரோனா! கதை சொல்லிய முன்னணி இயக்குனர் தனிமை படுத்தப்பட்டார்..! திரையுலகில் பரபரப்பு!
சமீபத்தில் பிரபல முன்னணி நடிகருடன் விலங்கை நடிக்க வைத்து படம் தயாரித்த பிரபல தயாரிப்பாளர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் பிரபல முன்னணி நடிகருடன் விலங்கை நடிக்க வைத்து படம் தயாரித்த பிரபல தயாரிப்பாளர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள்: அஜித், விஜய், நயன்தாரா, உள்ளிட்ட 14 பிரபலங்களின் கார் - பைக் கலெக்ஷன் பார்துருகீங்களா?
எனவே இந்த தயாரிப்பாளரை சந்தித்து, பிரபல முன்னணி இயக்குனர் ஒருவர் கதை கூறியுள்ளார். எனவே தயாரிப்பாளருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்ததும், உடனடியாக அவர் கொரோனா டெஸ்ட் செய்து கொண்டுள்ளதாகவும், தற்போது கொரோனா ரிபோர்டுக்காக வெயிட் பண்ணுவதால், அவர் தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
மேலும், சுகாதாரத்துறை அதிகாரிகள், இவருடைய குடும்பத்தினர் உட்பட கடந்த சில தினங்களாக இவருடன் நெருங்கி பழகி வந்தவர்கள் யார் யார் என கண்டறிந்து அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்: ஜி.வி.பிரகாஷ் பிறந்தநாள் ஸ்பெஷல்..! அன்று முதல் இன்றுவரை அரிய புகைப்பட தொகுப்பு!
மற்ற மாநிலங்களை விட சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் மொத்தம் 9 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். எனவே தங்களுடைய உடல் நிலையில் சிறு மாற்றம் ஏற்பட்டால் கூட மருத்துவர்களை அணுகி, பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என மருத்துவர்களும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் அறிவுறுத்தி வருகிறார்கள்.