Asianet News TamilAsianet News Tamil

ஸ்ரீதேவி மரணம்.... யூகத்தில் அடிப்படையில் எழுதிய இந்திய ஊடகங்களுக்கு... துபாய் ஊடகம் கண்டனம்...! 

dubai media question for indian medias
dubai media question for indian medias
Author
First Published Feb 28, 2018, 11:53 AM IST


நடிகை ஸ்ரீ தேவி கடந்த சனிக்கிழமை இரவு மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார் என முதலில் கூறப்பட்டது. பின் தடவியல் அறிக்கையில் அவர் பாத் டப்பில் இருத்த நீரில் மூழ்கி இறந்தார் என்றும் அவருடைய உடலில் ஆல்கஹால் கலந்திருப்பதாகவும் கூறினர்.

ஸ்ரீதேவி மரணத்தில் தெளிவான தகவல்கள் வெளியாகததாலும், அவருடைய உடலை துபாயில் இருந்து மும்பைக் கொண்டுவர இரண்டு மூன்று நாட்கள் ஆகும் என தகவல் வெளியானதாலும், ஸ்ரீதேவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக வாட்ஸ் வாப், சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களிலும் இவருடைய இறப்பில் மர்மம் உள்ளதாக செய்திகள் வெளியானது.

மேலும் யூகத்தின் அடிப்படையில், பல்வேறு செய்திகள் வெளியாகி சர்ச்சையை ஏற்ப்படுத்தியது. இதற்கு துபாய் ஊடகமான 'கலீஜ் டைம்ஸ்' கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஒரு மரணம் குறித்து எவ்வாறு ஊடகங்களால் முடிவு செய்ய முடிகிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios