Asianet News TamilAsianet News Tamil

சிவகார்த்தியேன் - சந்தானம் இருவருக்கும் இடையே உள்ள பிரச்சனை என்ன? உண்மையை போட்டுடைய இயக்குனர்!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த பிரபலங்கள்  சந்தானம் மற்றும் சிவகார்த்திகேயன். சந்தானத்திற்கு அறிமுகம் 'லொள்ளு சபா' என்றால் சிவகார்த்திகேயனுக்கு 'கலக்க போவது யாரு'.  இரண்டுமே காமெடியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட நிகழ்ச்சிகள் தான்.
 

director rajesh about santhanam and sivakarthikeyan fight
Author
Chennai, First Published Apr 5, 2019, 7:42 PM IST

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த பிரபலங்கள்  சந்தானம் மற்றும் சிவகார்த்திகேயன். சந்தானத்திற்கு அறிமுகம் 'லொள்ளு சபா' என்றால் சிவகார்த்திகேயனுக்கு 'கலக்க போவது யாரு'.  இரண்டுமே காமெடியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட நிகழ்ச்சிகள் தான்.

தற்போது இவர்கள் இருவருமே வெள்ளித்திரையில் அசைக்க முடியாத இடத்தை பிடித்திருந்தாலும், இருவரும் இணைந்து ஒரு படத்தில் கூட நடித்தது இல்லை. அதே போல் இருவரும் இணைந்து ஒரு புகைப்படம் கூட வெளியானது இல்லை.

director rajesh about santhanam and sivakarthikeyan fight 

இதனால் இவர்கள் இருவருக்குள்ளும் ஈகோ, மற்றும் தீர்க்க முடியாத பிரச்சனை உள்ளதாக பல ஆண்டுகளாகவே ஒரு தகவல் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. 

இருப்பினும் சந்தானம் - சிவகார்த்திகேயன் என இருவருமே, இது குறித்து ஒருமுறை கூட பேசியது இல்லை. இந்நிலையில் இவர்கள் இருவருக்குமே மிகவும் நெருக்கமான இயக்குனர்களில் ஒருவரான ராஜேஷ் முதல் முறையாக இவர்களுக்குள் என்ன பிரச்சனை என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் கொடுத்துள்ளார்.

director rajesh about santhanam and sivakarthikeyan fight

இது குறித்து அவர் கூறுகையில், இது முற்றிலும் வதந்தி. உண்மையில் சிவகார்த்திகேயன் ஒரு சந்தானம் ரசிகர் தான். அவர் 'ஓகே ஓகே' படத்தில் சந்தானம் செய்த காமெடியை பல முறை ரசித்து பார்த்துள்ளதாக என்னிடம் கூறியுள்ளார். அதே போல் தில்லுக்கு துட்டு இரண்டாம் பாகத்தை தனக்கு முன்னாள் பார்த்து விட்டு, சந்தானத்தின் நடிப்பை புகழ்ந்து தள்ளினார் என இயக்குனர் ராஜேஷ் கூறியுள்ளார். 

இதில் இது இத்தனை வருடங்களாக சிவகார்த்திகேயனுக்கும் , சந்தானத்திற்கு பிரச்சனை உள்ளதாக கிசுகிசுக்கபப்ட்ட வந்த செய்தி முடிவிற்கு வந்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios