Asianet News TamilAsianet News Tamil

முத்தையா முரளிதரன் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவே கூடாது’...கறார் காட்டும் ஆர்.கே.செல்வமணி...விஜய் தந்தைக்கும் கண்டனம்...

அக்கோரிக்கையை ஏற்று, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் அரங்கம் அமைப்பதற்கு தமிழக அரசின் சார்பில் 5 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி, அறிவிக்கப்பட்ட நிதியில் முதல் கட்டமாக 1 கோடி ரூபாய்க்கான காசோலையை ஆர்.கே. செல்வமணியிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தலைமைச் செயலகம் வரவழைத்து வழங்கினார். 

director r.k.selvamani speaks against vijay sethupathi
Author
Chennai, First Published Sep 17, 2019, 1:08 PM IST

தமிழர்களின் விரோதியான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறாக எடுக்கப்படவிருக்கும் ‘800’படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது. அப்படி மீறி நடித்தால் அவர் தமிழ் இன விரோதியாகக் கருதப்படுவார் என்று இயக்குநர் ஆர்.கே.செல்வமணி கறாராக அறிவித்தார்.director r.k.selvamani speaks against vijay sethupathi

காஞ்சிபுரம் மாவட்டம் பையனூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற திரைப்படக் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்புத் தளத்தின் திறப்பு விழாவில், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்புத் தளத்தின் அருகில் அரங்கம் கட்டித்தருமாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அக்கோரிக்கையை ஏற்று, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் அரங்கம் அமைப்பதற்கு தமிழக அரசின் சார்பில் 5 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி, அறிவிக்கப்பட்ட நிதியில் முதல் கட்டமாக 1 கோடி ரூபாய்க்கான காசோலையை ஆர்.கே. செல்வமணியிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தலைமைச் செயலகம் வரவழைத்து வழங்கினார். நேற்று  தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தலைமைச் செயலாளர் க. சண்முகம், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.வி. உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.director r.k.selvamani speaks against vijay sethupathi

இதைத் தொடர்ந்து நேற்று மாலை ஃபெப்ஸி அலுவலகத்தில்  பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஆர்.கே.செல்வமணி முதல்வர் எடப்பாடிக்கு திரையுலகம் சார்பில் நன்றி தெரிவித்துவிட்டு,’முதல்வரை இழிவு படுத்தும் வகையில் கேப்மாரி (இந்தப்பெயரை சுருக்கமாக சி.எம் என்று சொல்கிறார்கள்) என்கிற படமெடுத்து வரும் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்குக் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். அத்தோடு தமிழர்களின் விரோதியான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறாக எடுக்கப்படவிருக்கும் ‘800’படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது. அப்படி மீறி நடித்தால் அவர் தமிழ் இன விரோதியாகக் கருதப்படுவார் என்றும் தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios