இயக்குநர் மணிரத்தினம் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்...!
இயக்குநர் மணிரத்தினத்தின் அலுவலகத்துக்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இயக்குநர் மணிரத்தினத்தின் அலுவலகத்துக்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மணிரத்தினம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் திரைப்படம் அண்மையில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் பெண் செய்தியாளர்களை இழிவாக காண்பிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர், பெண் செய்தியாளர்கள் குறித்து மோசமான கருத்து ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவரது பதிவுக்கு பெண் செய்தியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எஸ்.வி.சேகர், வீட்டை முற்றுகையிட்டும் போராட்டங்கள் நடத்தினர். இது தொடர்பாக எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மணிரத்தினத்தின் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் அண்மையில் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில், பெண் செய்தியாளர் ஒருவர் மோசமான முறையில் சித்திரித்து காண்பிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. டி.வி. கூத்தாடி என்று பெண் செய்தியாளர்களை அழைப்பது போல படத்தில் வசனங்களும் இடம் பெற்றுள்ளன. இதற்கு பெண் செய்தியாளர்கள் சார்பில் கடும்
கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.பத்திரிகையாளர்கள் குறித்து யாரோ எழுதிய வசனத்திற்கு, நீங்கள் நியாயம் கற்பிக்க முயற்சி செய்கிறீர்களா மணிரத்தினம் என்று கடுமையான கண்டனங்களை பெண் செய்தியாளர்கள் தங்களது பேஸ்புக்-ல் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இயக்குநர் மணிரத்தினத்தின் அலுவலகத்திற்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. செக்கச் சிவந்த வானம் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்க வேண்டும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இயக்குநர் மணிரத்தினத்தின் அலுவலகத்துக்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து மயிலாப்பூர், அபிராமபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.