உண்மையில் நடுத்தெருவுக்கு வந்திருப்பேன்! காப்பாற்றியது யுவன் இசை தான்! உருகிய தனுஷ்!
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்த மாரி 2 திரைப்படம், நாளை திரைக்கு வர உள்ளது. இதனால் இந்த படத்தின் ப்ரோமோஷன் படு வேகமாக நடந்து வருகிறது.
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்த மாரி 2 திரைப்படம், நாளை திரைக்கு வர உள்ளது. இதனால் இந்த படத்தின் ப்ரோமோஷன் படு வேகமாக நடந்து வருகிறது.
அந்த வகையில் பிரபல நாளிதழுக்கு, பேட்டி அளித்த தனுஷ் மிகவும் உருக்கமாக பேசியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், "எனக்கு பிடித்த படம் மாரி. இப்போது இரண்டாம் பாகத்திலும் நடித்திருக்கிறேன், மாரி கதாபாத்திரத்தை பொறுத்தவரை, நல்லவனும் இல்லை கெட்டவனும் இல்லை அதனால் அந்த கேரக்டர் மிகவும் பிடிக்கும்.
இது ஒரு ஜாலியான பொழுதுபோக்கு படமாக இருக்கும். குடும்பத்தோடு அனைவரும் ரசிக்கும் படியான படமாக இருக்கும். இந்த படத்தில் சாய் பல்லவி மற்றும் வரலட்சுமி ஆகியோரோடு முதல்முறையாக நடித்ததில் மகிழ்ச்சி என தெரிவித்தார் தனுஷ்.
கூடுதல் சிறப்பாக இந்த படத்தில் இளையராஜா ஒரு பாடலை பாடி இருப்பது பெரிய ஆசீர்வாதம் என்றும், யுவன் சங்கர் ராஜா மூன்று அருமையான பாடல்களை தந்துள்ளார் என கூறினார்.
மேலும் யுவன் ஷங்கர் ராஜாவை சினிமாவுக்கு வருவதற்கு முன்பு இருந்தே தெரியும், " துள்ளுவதோ இளமை" படத்தில் நான் அறிமுகமானபோது... எனக்கென ஒரு அடையாளமே இல்லை. ஆறு பேருமே புதுமுகங்களாக வைத்து தான் எடுக்கப்பட்டது.
அந்த படத்திற்கு அடையாளம் கொடுத்தது யுவன் சங்கர் ராஜா இசை தான். அந்த படம் ஓடாவிட்டால் நிஜமாகவே நாங்கள் நடுத்தெருவில் தான் நின்றிருப்போம். இந்த சூழலில்தான் அன்றைக்கு இருந்தோம். யுவன் சங்கர் ராஜாவுக்கும் அவரது இசைக்கும் நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம். தங்களுடைய படத்தை தூக்கி நிறுத்தி காப்பாற்றியது அவருடைய இசை தான்.
துள்ளுவதோ இளமை காதல் கொண்டேன் படங்கள் வெற்றி பெற்றதற்கு யுவன் சங்கர் ராஜாவின் இசை தான் அதே போல் மாரி 2 வெற்றி பெற்றால் மாரி 3 படம் எடுப்பது குறித்து யோசிப்போம் என உருக்கமாக பேசினார் தனுஷ்.