விஜய் கரூர் மாவட்ட பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
கரூர் கூட்ட நெரிசல் பிரபலங்கள் இரங்கல்:
சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தவர்களில் நடிகர் விஜய்யும் ஒருவர். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி நாடு முழுவதும் மக்களை சந்தித்து தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து வருகிறார். இந்த நிலையில் தான் தளபதி விஜய் நேற்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்ட மக்களை சந்தித்து பேசினார்.
கரூரில் 39 பேர் மரணம் திமுக அரசின் திட்ட படுகொலை: டாக்டர். கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!
நாமக்கல் மாவட்டத்தில் தனது பரப்புரையை முடித்த கையோடு கரூர் சென்றிருந்தார். அப்போது, அங்கு மின்சாரம் தடைபட்டது. கடுமையான கூட்ட நெரிசல் உள்ளிட்ட பல சம்பவங்கள் நடந்தது. இதில், கூட்ட நெரிசலில் சிக்கி 5 குழந்தைகள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 40ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் தான் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கரூர் விஜய் கூட்டத்தில் திட்டமிட்டு மின் தடையா? நடந்தது என்ன? மின்சார வாரியம் விளக்கம்!
நடிகர் பார்த்திபன் இரங்கல்:
நடிகர் கார்த்தி இரங்கல்:
நடிகர் ரவி மோகன் இரங்கல்:
நடிகர் மோகன் லால்
நடிகர் மம்மூட்டி இரங்கல்
