Asianet News TamilAsianet News Tamil

நடிகர் அமீர் கானுக்கு கொரோனா..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் மும்பையில் தன்னுடைய வீட்டில் தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ள தகவல் வெளியாகி அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
 

Breaking actor ameer khan get corona positive
Author
Chennai, First Published Mar 24, 2021, 1:36 PM IST

பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் மும்பையில் தன்னுடைய வீட்டில் தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ள தகவல் வெளியாகி அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கொரோனா தொற்று சற்று ஓய்ந்ததை நினைத்து இந்திய மக்கள் மகிழ்ச்சியடைந்த நிலையில், ஆனால் தற்போது மீண்டும் கொரோனா அதிக அளவில் பரவ துவங்கியுள்ளது. சமீபத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அவரது அம்மா தெரிவித்தார். அதே போல் நடிகர் சூர்யா கொரோனாவால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் தான் அதில் இருந்து குணமடைந்த நிலையில், இவர்களை தொடர்ந்து தற்போது மற்றொரு முன்னணி பாலிவுட் ஸ்டார் நடிகர் அமீர் கான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

Breaking actor ameer khan get corona positive

இதுகுறித்து அவரது, செய்தி தொடர்பாளர் அமீர் கானுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை உறுதி செய்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள தகவலில், நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அந்த விதத்தில், நடிகர் அமீர் கானுக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது அவருக்கு பாசிட்டிவ் என வந்துள்ளது. இதை தொடர்ந்து, அவர் வீட்டிலேயே தன்னை தானே தனிமை படுத்திகொண்டு, மருத்துவர்களின் ஆலோசனைப்படி உரிய மருந்துகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவரது உடல்நிலை நலமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Breaking actor ameer khan get corona positive

பாலிவுட் முன்னணி நடிகரான, அமீர் கான் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அறிந்த அவரது ரசிகர்கள், விரைவில் அவர் உடல் நலம் தேறி வரவேண்டும் என பிராத்தனை செய்து வருகிறார்கள். அதே போல் மற்ற பிரபலங்கள் சிலரும், அவர் முழுமையாக கொரோனா தொற்றில் இருந்து குணமடைய வேண்டும் என, வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Breaking actor ameer khan get corona positive

மீண்டும் பரவ துவங்கியுள்ள கொரோனாவை கட்டு படுத்த, மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். 45 வயதை கடந்த அனைவரும், கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வது கட்டாயம் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios