Asianet News TamilAsianet News Tamil

அடிவாங்கி உடம்பு மறுத்துடுச்சு... நமீதாவின் கதையை கேட்டு கண்ணீரில் மூழ்கிய போட்டியாளர்கள்..!!

விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில்  (Biggboss seasson 5) இந்த வாரம் முழுவதும், போட்டியாளர்கள் தாங்கள் கடந்து வந்த பாதையை ஒரு கதையாக கூறவேண்டும் என்பதை பிக்பாஸ் ஒரு டாஸ்காக கொடுத்துள்ளார். இன்று வெளியாகியுள்ள புரோமோவில், நமீதாவின் (namitha marimuthu) கதையை கேட்டு அனைத்து போட்டியாளருமே கண்ணீர் விடும் காட்சி வெளியிடப்பட்டுளள்து.

 

biggboss seasson 5 contestant namitha marimuthu crying story
Author
Chennai, First Published Oct 7, 2021, 11:41 AM IST

விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுவதும், போட்டியாளர்கள் தாங்கள் கடந்து வந்த பாதையை ஒரு கதையாக கூறவேண்டும் என்பதை பிக்பாஸ் ஒரு டாஸ்காக கொடுத்துள்ளார். இன்று வெளியாகியுள்ள புரோமோவில், நமீதாவின் கதையை கேட்டு அனைத்து போட்டியாளருமே கண்ணீர் விடும் காட்சி வெளியிடப்பட்டுளள்து.

ட்ரான்ஸ் மாடலும், நடிகையுமான நமீதா, பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் போதே, தன்னை போன்ற திருநங்கைகளை சாதாரண மனிதராக பலர் பார்ப்பதில்லை. அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தன்னால் முடிந்தவரை தன்னுடைய சமூகம் பற்றி எடுத்து கூறவும் தான் வந்துள்ளதாக தெரிவித்தார்.

biggboss seasson 5 contestant namitha marimuthu crying story

இவர் ஒரு திருநங்கையாக இருந்தாலும், பிக்பாஸ் வீட்டில் இவரை யாரும் வேறுபடுத்தி பார்க்கவில்லை என்பது கடந்த மூன்று நாள் இவரிடம் போட்டியாளர்கள் நடந்து கொண்டதில் இருந்தே தெரிந்தது. எனவே நமீதாவும், மிகவும் சுதந்திரமாக தன்னுடைய விளையாட்டை தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்நிலையில் லக்சுரி டாஸ்குக்காக இன்றைய தினம் நமீதா தன்னை பற்றி மற்ற போட்டியாளர்கள் முன்னிலையில் பேசுகிறார்.

biggboss seasson 5 contestant namitha marimuthu crying story

அப்போது, தன்னுடைய அம்மா சிறிய வயதில் இருந்தே யாருக்காவது ஏதேனும் குறை இருந்தால் அதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என சொல்லி சொல்லி தான் வளர்த்ததாகவும், ஆனால்... எனக்கு இப்படி ஒரு குறை இருக்கிறது என்பது தெரிந்த பின்னர் என்னை அவங்க ஏற்றுக்கொள்ளவில்லை. அடி அடின்னு அடித்ததில் உடம்பே மறுத்து போச்சு. இப்போதும் திருநங்கைகள் என்றால் பிச்சை ஈடுபவர்களாகவும், பாலியல் தொழில் செய்பவர்களாகவும் தான் பலர் பார்க்கிறார்கள். இதற்கு முழு காரணம் பெற்றோர் தான். அவர்களை பெற்றோர் ஏற்றுக்கொள்வதில்லை. எங்களை மாறுங்கள் மாறுங்கள் என சொல்பவர்கள் முதலில் நீங்கள் மாறுங்கள் என கண்ணீரோடு கூறியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios