சனம்ஷெட்டியை விட்டாமல் துரத்தும் பிக்பாஸ் தர்ஷன்! இன்ஸ்டாகிராமில் என்ன தான் பதிவு செய்திருக்கிறார்.
நடிகர் தர்ஷன்,சனம் ஷெட்டிக்கும் நிச்சயதார்த்தம்; ஐந்து லட்சம் பணம் கொடுத்தேன்;ஆப்பில் போன் வாங்கி கொடுத்தேன்; என்னையை கல்யாண்ம் செய்யாமல் ஏமாத்திட்டான். என் மீது வீண் பழி சுமத்துறான்; முன்னாள் காதலுனுடன் இருந்ததாக சொல்லுவது பொய்; இரண்டரை வருடம் கணவன் மனைவி போல் இருந்தோம்; என்னை இனி யார் கல்யாணம் பண்ணுவாங்க, இதுக்கு மேல தர்ஷன் எனக்கு வேண்டாம்; அவன் மீது நடவடிக்கை எடுங்கனு போலீஸ் கமிசரிடம் கண்ணீர்மல்க முறையிட்டார் சனம்ஷெட்டி.
T.Balamurukan
நடிகர் தர்ஷன்,சனம் ஷெட்டிக்கும் நிச்சயதார்த்தம்; ஐந்து லட்சம் பணம் கொடுத்தேன்;ஆப்பில் போன் வாங்கி கொடுத்தேன்; என்னையை கல்யாண்ம் செய்யாமல் ஏமாத்திட்டான். என் மீது வீண் பழி சுமத்துறான்; முன்னாள் காதலுனுடன் இருந்ததாக சொல்லுவது பொய்; இரண்டரை வருடம் கணவன் மனைவி போல் இருந்தோம்; என்னை இனி யார் கல்யாணம் பண்ணுவாங்க, இதுக்கு மேல தர்ஷன் எனக்கு வேண்டாம்; அவன் மீது நடவடிக்கை எடுங்கனு போலீஸ் கமிசரிடம் கண்ணீர்மல்க முறையிட்டார் சனம்ஷெட்டி. ஆனால் தர்ஷனோ, எனக்கும் சனம்ஷெட்டிக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது உண்மை தான். ஆனால் அவள் முன்னாள் காதலனோடு ஒன்றாக இருந்ததை பார்த்த பிறகு எந்த ஆம்பளையாவது அவளை ஏற்றுக்கொள்வானா?என்று தன் வாதத்துக்காக நியாயம் கேட்டு வருகிறார் தர்ஷன்.
இந்த நிலையில் சனம் ஷெட்டியை பிரிந்த காரணத்தை தர்ஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
'சில உறவுகள் தோல்வி அடைவதற்கு என்ன காரணமாக இருந்தாலும், அது இருவர் சம்பந்தப்பட்ட விஷயம். ஒருவருக்கு அல்லது இருவருக்கு மகிழ்ச்சி இல்லை என்றால் பிரச்சினை சிக்கலாவதற்குள் சுமுகமாக பிரிவதுதான் தீர்வாக இருக்கும். மகிழ்ச்சியில்லாத உறவை தொடர்வது சரியல்ல'.சனம்ஷெட்டி மீது மரியாதை வைத்திருந்தேன். ஆனால் எங்கள் உறவு ஆரோக்கியமானதாக இல்லை. அவர் என்னை ஒழிக்க முயன்றார். நான் காயப்பட்டேன். அவரது குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. எனது எதிர்காலம் மீது முன்பை விட அதிக கவனம் செலுத்தி வருகிறேன். எனக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு நன்றி'.என்று பதிவு செய்திருக்கிறார் அவர்.