Asianet News TamilAsianet News Tamil

கைதாகிறாரா ஆர்யா..?! சுசானாவின் அப்பா எடுத்த அதிரடி முடிவால் ஆடிப்போன புது மாப்பிள்ளை ..!

arya may arre4st soon susanas father complaints against arya
arya may arre4st soon  susanas father complaints against arya
Author
First Published Apr 23, 2018, 2:51 PM IST


பிரபல தனியார் தொலைகாட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி நடந்தது. நடிகர் ஆர்யா இந்த நிகழ்ச்சி மூலம் தன்னுடைய மனைவியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே திட்டம் ....

நிகழ்ச்சியின் நோக்கமும் அதே தான்.....

தன்னுடைய ஒரு வீடியோ பதிவின் மூலமாக, ஆயிரக்கணக்கான  பெண்கள் ஆர்யாவை திருமணம் செய்து கொள்ள ஆர்வம் காட்டி விண்ணப்பித்து இருந்தனர்.  

arya may arre4st soon  susanas father complaints against arya

பின்னர் கடைசியாக, 16  பெண்களை மட்டும் தேர்வு செய்து  போட்டியாளர்களை களமிறக்கிய ஆர்யா, ஒவ்வொரு பெண்களுடன்  ஜாலியாக ஊர் சுற்றுவது, பழகுவது என தொடர் தொடர்ந்து வர, கடைசியில் 3 பேர் மட்டுமே மிஞ்சினர்.

இந்த மூன்று பேரில் ஒருவரை கண்டிப்பாக ஆர்யா தேர்வு செய்யப் வேண்டும் என்ற நிலை ஏற்படும் போது, "தற்போது தனக்கு மனநிலை  சரி இல்லை...என்னால் இந்த மூன்று பேரில் ஒருவரை தேர்வு செய்வது என்பது கடினமான ஒரு செயல்...இன்னும் எனக்கு கால அவகாசம் வேண்டும் என தெரிவித்து, நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார் ஆர்யா.....

ஏமார்ந்து போன நேயர்கள் மற்றும் போட்டியாளர்கள்

இந்த நிகழ்ச்சியின் மூலம்,கடைசியில் மிஞ்சிய மூன்று போட்டியாளர்களுக்கும் ஏமாற்றமே மிச்சமாக உள்ளது...நேயர்களும் ஆர்யாவின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

arya may arre4st soon  susanas father complaints against arya

மக்கள் மத்தியில் சானல் பிரபல அடைவதற்கும், போட்டியாளர்களை  பிரபலம் அடைவதற்கும், மக்களுக்கு ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சியாக மட்டும் தான் எங்க வீட்டு மாப்பிள்ளை  நிகழ்ச்சி நடந்து முடிந்தது

இந்நிலையில், இலங்கை பெண்ணான சுசானாவின் அப்பா,ஆர்யாவின் இந்த செயலால்,நிகழ்ச்சி முடியும் தருவாயிலேயே கோபம் அடைந்தார்..இதற்காகவா கனடாவிலிருந்து இங்கு வந்தோம் என கூறி  கோபப்பட்டார்.

arya may arre4st soon  susanas father complaints against arya

பின்னர் நிகழ்ச்சி முடிந்து ஒரு வாரம் ஆகியும், இதுவரை அந்த மூவரில் ஒருவரையும் ஆர்யா தேர்வு செய்யாததால் சுசானாவின் அப்பா, காவல்  நிலையத்தை அணுக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒரு வேளை சுசானாவின் அப்பா, ஆர்யா மீது புகார் அளிக்கும் தருவாயில், ஆர்யா கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது என கூறப் படுகிறது.

மேலும் தொலைக்காட்சியும் சிக்கலை சந்திக்க நேரிடும் என கூறப்படுகிறது.

இந்த நிகழ்சியின் மூலம் பார்வையாளர்கள் மத்தியில் 5 ஆம் இடத்திற்கு முனேறி உள்ளது கலர்ஸ் தொலைக்காட்சி.

arya may arre4st soon  susanas father complaints against arya

இந்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைக்க ஆர்யா எடுக்கும் முடிவு தான்  மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.   

Follow Us:
Download App:
  • android
  • ios