இரண்டாவது திருமணத்திற்கு தயாராகிவிட்டேன்! காதலரை கரம்பிடிக்க போகும் அமலாபால்!
கடந்த ஓரிரு வாரத்திற்கு முன் நடிகை அமலாபால் - இயக்குனர் ஏ.எல்.விஜய் விவாகரத்து குறித்து முதல் முறையாக, பேட்டி ஒன்றில் பேசிய பிரபல தயாரிப்பாளரும், ஏ.எல்.விஜய்யின் தந்தையுமான ஏ.எல்.அழகப்பன். தனுஷால் தான் அமலாபால் - ஏ.எல்.விஜய் இருவருக்கும் விவாகரத்து ஏற்பட்டதாக கூறியிருந்தார்.
கடந்த ஓரிரு வாரத்திற்கு முன் நடிகை அமலாபால் - இயக்குனர் ஏ.எல்.விஜய் விவாகரத்து குறித்து முதல் முறையாக, பேட்டி ஒன்றில் பேசிய பிரபல தயாரிப்பாளரும், ஏ.எல்.விஜய்யின் தந்தையுமான ஏ.எல்.அழகப்பன். தனுஷால் தான் அமலாபால் - ஏ.எல்.விஜய் இருவருக்கும் விவாகரத்து ஏற்பட்டதாக கூறியிருந்தார். இது திரையுலகில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதுவரை தன்னுடைய விவாகரத்து குறித்து எதுவும் வாய்திறக்காமல் இருந்த அமலாபால், விவகாரத்துக்கு காரணம் யாரும் இல்லை என்றும், சொந்த பிரச்சனையின் காரணமாகவே விவாகரத்து பெற்றதாக அதிரடியாக கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்: பிறந்தநாள் ஸ்பெஷல்... மனைவியுடன் ரியோ அடித்த லூட்டிகள்..! புகைப்பட தொகுப்பு!
தல அஜித் நடித்த 'கிரீடம்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.எல்.விஜய். இந்த படத்தை தொடர்ந்து, மதரசாபட்டினம், தெய்வதிருமகள், தலைவா, தேவி உள்ளிட்ட பல படங்களை இயக்கி வெற்றி இயக்குனராக தமிழ் திரையுலகில் தன்னுடைய பெயரை நிலை நிறுத்தி கொண்டவர்.
இயக்குனர் விஜய் தெய்வதிருமகள் படத்தை இயக்கியபோது, அந்த படத்தில் நடித்திருந்த நடிகை அமலா பாலுக்கும், இவருக்கும் காதல் மலர்ந்தது.
இருவரும் தங்களுடைய காதலை வீட்டில் கூறி, பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின் கருத்து வேறுபாடு காரணமாக 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
ஆனால் இதுவரை இவர்கள் இருவரும், தங்களுடைய விவாகரத்து குறித்து வெளிப்படையாக பேசியது இல்லை. இந்நிலையில் முதல் முறையாக, ஏ.எல்.விஜய்யின் தந்தை கடந்த ஓரிரு வாரத்திற்கு முன் இவர்களுடைய பிரிவிற்கு காரணம் நடிகர் தனுஷ் தான் என தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மேலும் செய்திகள்: நடிகை சிவரஞ்சனி வீட்டில் நடந்த சோகம்! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்!
இது குறித்து அவர் கூறுகையில், திருமணத்திற்கு பின் நடிகை அமலா பால் நடிக்க வேண்டாம் என முடிவு செய்திருந்தார். அவரை தனுஷ் அவருடைய தயாரிப்பில் உருவான 'அம்மா கணக்கு' படத்தில் நடிக்க வைத்தார். இந்த படத்தில் நடிக்க துவங்கிய பின்பு தான் விஜய் - அமலாபால் இடையே பிரச்சனைகள் வர துவங்கியது என குற்றம் சாட்டினார். இது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த பிரச்சனை குறித்து நடிகை அமலாபால் பேட்டி ஒன்றில் தற்போது கூறியுள்ளதாவது... தன்னுடைய விவாகரத்துக்கு காரணம் யாரும் இல்லை என்றும், சொந்த பிரச்சனையின் காரணமாகவே தான் விவாகரத்து பெற்று பிரிந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் விரையில் தான் காதலித்து வருபவரை திருமணம் செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார் அமலாபால்.
ஏற்கனவே 'ஆடை ' படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில், கலந்துகொண்டபோது ஒருவரை காதலித்து வருவதாக உறுதிப்படுத்தும் வகையில் அமலாபால் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.