Asianet News TamilAsianet News Tamil

Allu Arjun about Pushpa : புஷ்பா படம்... நினைச்சது நடக்காம போயிருச்சே என வருத்தப்பட்ட அல்லு அர்ஜுன்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் இன்று வெளியாகி உள்ள புஷ்பா (Pushpa) படம், ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

Allu Arjun says about Pushpa movie
Author
Tamil Nadu, First Published Dec 17, 2021, 3:31 PM IST

பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் (Allu Arjun) நடித்துள்ள படம் 'புஷ்பா'. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தலை மையமாக வைத்தும்...  அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் கூறும் வகையிலும் எடுக்கப்பட்டுள்ளது.  

Allu Arjun says about Pushpa movie

இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும், மரம் கடத்துபவராகவும் இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் மிரட்டல் வில்லனாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். இதுதவிர ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், ஹரிஷ் உத்தமன், கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இரண்டு பாகமாக தயாராகி வரும் இப்படத்தின் முதல் பாகம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் இன்று வெளியாகி உள்ளது. இப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பி வருவதாக கூறப்படுகிறது.

Allu Arjun says about Pushpa movie

 இந்நிலையில், இந்த படத்தில் தான் நினைத்தது நடக்காமல் போனது குறித்து வருத்தத்தை பதிவு செய்துள்ளார் நடிகர் அல்லு அர்ஜுன். அது என்னவெனில், புஷ்பா படத்தின் முக்கிய சண்டைக் காட்சியை கேரளாவில் படமாக்க திட்டமிட்டு இருந்தார்களாம். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அங்கு படப்பிடிப்பை நடத்த முடியாமல் போனது தனக்கு மிகவும் வருத்தம் தந்ததாக அவர் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios