Asianet News TamilAsianet News Tamil

ஐஷ்வர்யா மேனனை சந்தித்த தாய் கிழவி ஷோபனா...நாயகியை வைத்து புதிய முயற்சி எடுக்கும் தயாரிப்பு நிறுவனம்

நித்யா மேனன் நேரலையில்  ரசிகர்களை சந்தித்தபோது இவரை அனைவரும் தாய்க்கிழவி என்று அழைத்துள்ளனர். அதற்கு தன்னை தாய் கிழவி என அழைக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார் நாயகி.

actress nithya menon interview about role in thiruchitrambalam
Author
Chennai, First Published Aug 23, 2022, 7:28 PM IST

தனுஷின் திருச்சிற்றம்பலம் ஆகஸ்ட் 18 அன்று திரையரங்குகளில் வெளியாகிய வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தனுஷ் ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்பிற்கு பிறகு இந்த படம் திரையரங்குகளில் வெளியானது. முன்னதாக ஜகமே தந்திரம் முதல் தி கிரே மேன் வரை அனைத்து படங்களும் ஓடிடியில் தான் வெளியாகியிருந்தது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு தனுஷின் படம் திரையரங்குகளில் வெளியாவதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

முன்னதாக திருச்சிற்றம்பலம் படம் உலகம் முழுவதும் 50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ஐந்தாவது நாளில் ரூ.10 கோடியை நெருங்கி உலகம் முழுவதும் 60 கோடியை எட்டி விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 44 கோடி வசூலித்துள்ளதாம். இந்த படத்தில் தனுசுடன் நித்யா மேனன், ராசிகண்ணா, பிரியா பவானி சங்கர் என மூன்று நாயகிகள் தோன்றியுள்ளனர்.அதேபோல பிரகாஷ்ராஜ், திருச்சிற்றம்பலத்தின் தந்தையாகவும், பாரதிராஜா அவரின் தாத்தாவாகவும் நடித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு...நீல நிற கோட் அணிந்தது கிக் போஸ் கொடுத்த தமிழ் ராக்கர்ஸ் நாயகி

actress nithya menon interview about role in thiruchitrambalam

மூன்று நாயகிகளில் யாரை மணமுடிப்பார் என்ற குழப்பத்தில் இருக்கும் நாயகனுக்கு தனது சிறுவயது தோழியான நித்யா மேனன் மனைவியாக அமைவதே படத்தின் முழு கதையும் இடையில் தந்தை செண்டிமெண்ட் சிறிதளவு கொடுக்கப்பட்டிருக்கிறது. நீண்ட நாள் காத்திருப்பு என்பதால் படம் மிகப்பெரிய கொண்டாட்டத்தில் உள்ளது. முன்னதாக படத்தில் இருந்து வெளியான தாய்க்கிழவி பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தது. 

மேலும் செய்திகளுக்கு...கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடிய கையோடு தனுஷ் பட நாயகியாக மாறிய மைனா...

இந்த பாடல் ஷோபனவாக வரும் நித்தியாமேனனுக்காக தான் தனுஷ் பாடியிருப்பார். படம் வெளியான பிறகு நித்தியாமேனனின் புகழ் கூடிவிட்டது என்றே கூறலாம். தற்போது பல youtube சேனல்களுக்கு பேட்டியளித்து வரும் இவர் சமீபத்தில்  சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு கொடுத்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது. இது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sun Pictures (@sunpictures)

மேலும் செய்திகளுக்கு...9 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயிலர் மூலம் தமிழுக்கு என்ட்ரி கொடுக்கும் சர்ச்சை நடிகர்

அதில் நித்யா மேனன் இரு வேடங்களில் தன்னைத் தானே பேட்டி கொள்கிறார். முன்னதாக இவர் ரசிகர்களை நேரலையில் சந்தித்தபோது இவரை அனைவரும் தாய்க்கிழவி என்று அழைத்துள்ளனர். அதற்கு தன்னை தாய் கிழவி என அழைக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார் நாயகி. சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள சமீபத்திய பேட்டியில் தான் நடித்த ஷோபனா ரோல் குறித்து பேசி உள்ளார் நித்யா மேனன்.

Follow Us:
Download App:
  • android
  • ios