இளசுகளை சூடேற்றி வரும் இலியானாவின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. இந்த சமயத்தில் தெலுங்கில் முன்னணி நடிகர்களாக உள்ள மகேஷ்பாபு, அல்லு அர்ஜூன் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை வேண்டாம் என சொல்லி கதவை சாத்தியுள்ளார் இலியானா.

ஒரு காலத்தில் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையான வலம் வந்தவர் நம்ம இடையழகி இலியானா. தமிழ், தெலுங்கு என முன்னணி நாயகர்களுடன் வளைச்சி, வளைச்சி ஜோடி போட்டு வந்த இலியானா, திடீர் என பாலிவுட் வாய்ப்பு வந்ததால் மும்பையில் செட்டில் ஆனார். கடந்த 6 வருடங்களில் பர்ஃபி, ஹேப்பி என்டிங், கிக் 2 உள்ளிட்ட 8 படங்களில் நடித்துள்ளார். பாலிவுட்டை நம்பி டோலிவுட்டை கைவிட்ட இலியானா, தாய் வீட்டை முற்றிலும் மறந்தே போனார். தெலுங்கில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு வந்த போதும் அதனை மறுத்தார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தற்போது பாலிவுட் திரையுலகில் பெரிய அளவில் எதுவும் சாதிக்காத இலியானா, "அமர்,அக்பர், அந்தோணி" என்ற படத்தின் மூலம் மீண்டும் டோலிவுட்டிற்கு திரும்பி வந்தார். எப்படியாவது தெலுங்கில் தவறவிட்ட நம்பர் ஒன் ஹீரோயின் இடத்தை பிடித்துவிட வேண்டுமென போராடி வருகிறார் இலியானா. இதற்காக பல ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி, அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். 

இதையும் படிங்க: மீண்டும் பட வாய்ப்பை பிடிக்க பக்கா பிளான்... தாறுமாறு கவர்ச்சி காட்டும் இலியானா... இணையத்தில் வைரலாகும் கவர்ச்சி கிளிக்ஸ்...!

இளசுகளை சூடேற்றி வரும் இலியானாவின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. இந்த சமயத்தில் தெலுங்கில் முன்னணி நடிகர்களாக உள்ள மகேஷ்பாபு, அல்லு அர்ஜூன் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை வேண்டாம் என சொல்லி கதவை சாத்தியுள்ளார் இலியானா. என்னவென்று விசாரித்தால், வந்தவர்கள் இலியானாவை ஹீரோயினாக புக் செய்ய வரவில்லையாம், சிங்கிள் பாட்டுக்கு குத்தாட்டம் போட முடியுமா என கேட்டார்களாம். இதனால் கடுப்பான இலியானா இன்னும் என் நிலைமை அந்த அளவுக்கு மோசமாகவில்லை எனக்கூறி அனுப்பிவிட்டாராம். நடிச்சால் ஹீரோயினாக மட்டும் தான் நடிப்பேன் என இலியானா உறுதியான முடிவை எடுத்துள்ளார்.