போஸ்டருக்கு பால் ஊற்றி திட்டு வாங்கிய தளபதி ரசிகர்கள் செய்த செயல்..! குவியும் பாராட்டு..!
தளபதி விஜய்யின் ரசிகர்கள், இயற்க்கை பேரிடர் காலங்களில் எப்போதுமே தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார்கள்.
தளபதி விஜய்யின் ரசிகர்கள், இயற்க்கை பேரிடர் காலங்களில் எப்போதுமே தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார்கள்.
அந்த வகையில், கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் விதமாக, மக்களுக்கு சானிடைசர், முக ககசம், போன்றவற்றை இலவசமாக வழங்கி.... வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தி வருகிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க, வடசென்னையை சேர்ந்த விஜய் ரசிகர்கள், 1000 குடும்பத்திற்கு தேவையான பால் பாக்கெட்டுகளை இலவசமாக வழங்கியுள்ளனர். இதன் மூலம் பல பச்சிளம் குழந்தைகளின் பசியை தீர்த்துள்ளனர் விஜய் ரசிகர்கள்.
தளபதியின் திரைப்படங்கள் வெளியாகும் போது, போஸ்டருக்கும், கட்டவுட்டுக்கும் பால் ஊற்றி அபிஷேகம் செய்து, பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி திட்டு வாங்கிய இவர்கள் செய்த செய்யலாம் இன்று மனம் வந்து பலர் பாராட்டி தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.