actor abi saravanan help for kanyakumari people
கடந்த 6 நாட்களுக்கும் மேலாக குமரி மாவட்டத்தில் எப்போதும் போல் தனது சமூக பணியை தொடர்ந்து செய்து வருகிறார் நடிகர் அபி சரவணன் .
குமரி மாவட்டத்தை குறிவைத்து தாக்கிய ஒகி புயலினால் மீனவ சமுதாயம் பெரிதளவில் இழப்பை உண்டாக்கியது... இதனால் விவசாயிகள் பயிரிட்ட வாழைமரங்கள், மீனவர்களின் வலை, படகு , வீடு என அனைத்தும் சேதமடைந்தது. \
இந்நிலையில்... மனபாரம்தாங்காமல் குமரி மாவட்டத்திற்கு பயணமானேன்... வழியில் என்னால் இயன்ற தேவையான நிவராண பொருட்களை காரில் நிரப்பியவாறு சென்றேன்.... என கூறுகிறார் அபி சரவணன்.
தொடர்ந்து பேசிய அவர் அதிகாலை குமரியின் மீனவ கிராமங்களில் நுழைந்த போது காதைமட்டுமல்ல இதயத்தை துளைத்த கதறல்கள்..அப்பாவை தேடும் குழந்தையும் அண்ணணை தேடும் தங்கை கணவனை தேடிய மனைவிகளின் கதறல் கடவுளுக்கே கண்ணீரை தரும்...

அதேநேரம் சுசீந்தரம் பகுதியில் உள்ள ஒருகிராமத்தில் ஒரு பகுதியின் மக்கள் உணவு தண்ணீரின்றி தவிப்பதாகவும் இதுவரை எந்த அரசியல்வாதிகளோ அதிகாரிகளோ மீடியாக்களோ தொண்டு நிறுவனங்களோ காலை வைக்காத பகுதி என நண்பர் பிரபு மூலம் தகவல் கிடைக்க... உடனடியாக பயணமானோம்...
நடந்து சென்ற போது அந்த குழந்தைகளின் பசி கதறலை தாண்டி பெண்கள் ஆகியோர் வலியை வார்த்தையால் கேட்க முடிந்தது. உடனடியாக கொண்டு சென்ற
பிஸ்கட்கள், பிரட் ,ஜாம், பழங்கள் ,தண்ணீர், குளுக்கோஸ், ரஸ்க், உலர்திராட்சை, பருப்புகள் வழங்கிய நொடியிலே உண்டபோது அவர்களின் வேதனை உணர முடிந்தது...

பின் அவர்களிடம் விவரம் கேட்டறிந்தபோது தண் ணீரின்றி ஒரு நாளாக தவிப்பதாக கதறினர்...
இந்த தெருவில் இருபத்தி எட்டு வீடுகளில் எட்டு வீடுகள் ஒகியால் இடிந்து தரைமட்டமானது... பன்னிரு வீடுகள் சேதமாகியுள்ளது.... அனைவரும் நடுத்தெருவில் குழந்தைக ளுடன் இரவு தூங்கியுள்ளர்... வயது பெண்களின் அவஸ்தை சொல்ல முடியால் ஒதுங்கி நின்றனர்... மூன்று குடும்பத்தினர் ஆபத்தானநிலையில் மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.....
தரைமட்டமான வீடுகளில் எதையோ தேடியவர்களிடம் விசாரித்தபோது ஆதார்கார்டுஎனவும் அது இருந்தால் மட்டுமே முகாம் செல்ல முடியும் நிவாரணம் பெற முடியும் என கதறினர்.....

காரில் உள்ள நிவாரணப் பொருட்களை நண்பர் பிரபு மற்றும் மக்கள் உதவியுடன் தூக்கி சென்று அனைவருக்கும் பகிர்ந்தளித்தோம்...என்றார்.
மேலும் மக்களுக்கு தேவையானவற்றை தொடர்ந்து வழங்கி வருகின்றனராம்.
