Dec 1, 2022, 7:48 PM IST
பெரம்பூரில் அரசு பேருந்து நடத்துனருக்கும், பெண் பயணிக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வேளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரம்பூர் வழியாக பயணிகளை ஏற்றி சென்ற மாநகரப் பேருந்து கணேசபுரம் பஸ்டாப்பில் நின்று பயணிகளை ஏற்றுக் கொண்டு புறப்பட்டது. அப்போது ஒரு புளியந்தோப்பை சேர்ந்த அனிதா என்ற பெண் ஓடிவந்து பேருந்து ஏறியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: திருநங்கை மாணவி வைத்த, கோரிக்கையை சிறிது நேரத்தில் நிவர்த்தி செய்த ஆட்சியர்!
இதனால் நடத்துனர் அவரை திட்டியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வாக்குவாதம் முற்றியதை அடுத்து அனிதா நடத்துநரை தகாத வார்த்தைகளால் திட்டியோதோடு தாக்குதலும் நடத்தினார். நடத்துநரும் பதிலுக்கு தாக்கினார். இருவருக்கும் இடையே கைகலப்பானது. இதனால் பேருந்து நடு வழியில் நிறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: பல கெட்டப்பில் காமெடியில் தெறிக்கவிடும் வடிவேலுவின் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்'..! ட்ரைலர் வெளியானது..!
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த செம்பியம் காவல்துறையினர் அனிதாவையும் நடத்துநரையும் சமாதானப் படுத்தி நடுவழியில் நிறுத்தப்பட்ட பேருந்தை அகற்றி போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனர். இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.