Rasi Palan : இந்த 4 ராசிக்காரரிடம் எச்சரிக்கையாக இருங்கள்...முதுகுக்கு பின்னால் குத்திவிடுவார்கள்..!

First Published Apr 25, 2024, 10:45 PM IST

ஜோதிடம் படி, ராசிகளுக்கும் ஆளுமைக்கும் தொடர்பு உண்டு. அந்தவகையில், இந்த 4 ராசிக்காரர்களும் ஏமாற்றும் குணம் கொண்டவர்கள். அந்த ராசிகளை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

ஜோதிடம் என்பது மனிதர்களின் இயல்பு மற்றும் அவர்களின் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைக் கணிக்க உதவுகிறது. இந்து மக்கள் இதை ரொம்பவே நம்புவார்கள் மேலும், இது ஒவ்வொரு ராசியின் தன்மை பற்றிய சொல்லுகிறது. அந்தவகையில், சில குறிப்பிட்ட ராசிக்காரர்கள் அதாவது அந்த ராசியைச் சேர்ந்தவர்கள் தங்களை நம்பும் மக்களை பெரும்பாலும் ஏமாற்றுவார்கள். எனவே அந்த ராசிகள் இதோ..

மேஷம்: இவர்கள் வாழ்க்கையில் சாகச செயல்களுக்கும், வல்லரசுகளாகத் தோன்றுவதற்கும் பெயர் பெற்றவர்கள். ஆனால் இவர்கள் தங்கள் நெருங்கிய நபர்களை ஏமாற்றுவதன் மூலம் மிகவும் துரோகமாக அறியப்படுகிறார்கள்.

விருச்சிகம்: ஒவ்வொரு வேலையிலும், இந்த ராசிக்காரர்கள் அதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், இவர்கள் சில நேரங்களில்  தங்கள் ஆசைகளையும், குறிக்கோள்களையும் நிறைவேற்ற மற்றவர்களை ஏமாற்றவும் தயாராக இருக்கிறார்கள். 

மிதுனம்: இவர்களை மிஞ்சும் பேச்சாளர் வேறு யாரும் இல்லை. வார்த்தைகளால் மக்களை தன் பக்கம் இழுக்கும் திறமை இந்த ராசிக்கு உண்டு. ஆனால் இந்தப் பேச்சு எப்போதும் பிறர் நலனுக்காகப் பயன்படும் என்று சொல்ல முடியாது. சில சமயம் வஞ்சக வார்த்தைகளால் கூட ஒருவரை குழியில் விழ வைக்கும் வாய்ப்பு உள்ளது. 

துலாம்: இவர்கள் எப்போதும் அமைதியை விரும்புவார்கள். ஆனால், இதே அமைதி மந்திரம் சில சமயங்களில் மற்றவர்களை சந்திக்கும் போது அவர்களிடமிருந்து தப்பிக்கவும் அவர்களின் நம்பிக்கையை கெடுக்கவும் பயன்படுத்துகிறார். எனவே, சில கடினமான சூழ்நிலைகளில் இந்த ராசியை நம்புவது கடினம்.

click me!