திருவண்ணாமலை ATM கொள்ளை வழக்கு..! குற்றிவாளியை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்த போலீசார்!

திருவண்ணாமலை ATM கொள்ளை வழக்கு..! குற்றிவாளியை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்த போலீசார்!

Published : Feb 18, 2023, 11:48 AM IST

ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டு நியூஜ் மாவட்டத்தில் பதுங்கி இருந்த முக்கிய குற்றவாளி ஹிரிப் (35) என்பவரை சுற்றி வளைத்து கைது செய்து, விமானம் வழியாக சென்னைக்கு அழைத்து வந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி நள்ளிரவில் 4 ஏடிஎம் மையங்களில் காஸ் வெல்டிங் மூலம் உடைத்து ரூ.73 லட்சம் ரூபாய் கொள்ளை நடந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தடையங்கள் எதுவும் சிக்கிவிடக்கூடாது என்பதால் ஏடிஎம்களை தீ வைத்து எரித்தனர்.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வங்கி ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட வட மாநில கொள்ளை கும்பல் சித்தூர் வழியாக ஆந்திர மாநிலம் சென்று கர்நாடக மாநிலத்தில் கோலார் கேஜிஎப் பகுதியில் தங்கி மறுநாள் தான் வெளிமாநிலத்ததிற்கு தப்பிச்சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்து தப்பி செல்ல உதவிய நபரை போலீசார் நேற்று இரவு கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், அரியானா மாநிலத்திற்கு சென்ற தனிப்படையினர் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டு நியூஜ் மாவட்டத்தில் பதுங்கி இருந்த முக்கிய குற்றவாளி ஹிரிப் (35) என்பவரை சுற்றி வளைத்து கைது செய்து, விமானம் வழியாக சென்னைக்கு அழைத்து வந்தனர்.
 

03:31திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர்கள் யோகிபாபு மற்றும் ரவிமரியா
02:13அமைச்சர் எ.வ.வேலு மகன் விபத்தில் சிக்கி படுகாயம்.. திருவண்ணாமலை அருகே பெரும் விபத்து..
01:03ஆரணி அரசுப்பள்ளியில் மாணவர்களுக்கான சிற்றுண்டியில் பல்லி; 13 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
04:39திருவண்ணாமலையில் பக்தர்கள் வெறும் கைகளால் வடை சுட்டும், தேர் இழுத்தும் நேர்த்திக்கடன்
4550:00திருவண்ணாமலை பெரிய நந்தி பகவானுக்கு பழம், இனிப்புகளால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்ட பக்தர்கள்
02:48திருவண்ணாமலையில் உலக நன்மை வேண்டிசிவஹரி பூஜை பெருவிழா; திரளான சிவனடியார்கள் பங்கேற்பு
07:34தீபத்திருவிழா; தீபம் ஏற்றப்படும் கொப்பரை மலைக்கு கொண்டு செல்லும் பணி துவக்கம்
5450:00மண்வெட்டியை கையில் பிடித்து கிரிவலப்பாதையை சுத்தம் செய்த அமைச்சர் ஏ.வ.வேலு
04:05திருக்கார்த்திகை தீபத்திருவிழா; தங்க சூரிய பிரபை வாகனத்தில் அண்ணாமலையார் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
02:00அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் தீபத்திருவிழா வெகு விமரிசையாக தொடக்கம்