குஜராத் மாநிலம் மோர்பி நகரின் மச்சு ஆற்றின் குறுக்கே உள்ள 100 ஆண்டு பழமையான தொங்கு பாலம் அறுந்து விழுந்தது. இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 135 பேர் கொடூரமாக உயிரிழந்தனர். 170 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் பிரதமர் மோடி இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மோர்பி மருத்துவமனையில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.

09:59 PM (IST) Nov 01
‘130 கோடி மக்கள் வாழுகின்ற இந்தியாவில் 22 ஆட்சி மொழிகள் இருக்க முடியுமா? என்று கேட்டால், 100 சதவீதம் இருக்க முடியும்’ என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
09:34 PM (IST) Nov 01
காலங்காலமாக, மனிதன் உடல் ரீதியான தடைகளுக்கு இடையிலான இடைவெளிகளைக் குறைக்க, எளிதான பாதையை வழங்கும் நோக்கத்திற்காக கட்டிடக்கலையை அந்த காலத்தில் உருவாக்கினார்கள். உலகின் மிகவும் பிரபலமான பாலங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
08:42 PM (IST) Nov 01
நயன்தாராவுக்கு திருமணம் ஆகிவிட்டதால் அடுத்த லேடி சூப்பர்ஸ்டார் ஆகும் நோக்கத்தில் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறீர்களா என்கிற கேள்வி ஐஸ்வர்யா ராஜேஷிடம் முன்வைக்கப்பட்டது. மேலும் படிக்க
07:56 PM (IST) Nov 01
சிறையில் பாதுகாப்பாக இருப்பதற்கு, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சத்யேந்தர் ஜெயினுக்கு, இடைத் தரகர் சுகேஷ் சந்திரசேகர் கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாக தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
07:23 PM (IST) Nov 01
சென்னையில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் பாஜக தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டுள்ளார்.
07:18 PM (IST) Nov 01
2 கோடிக்கு கூட ஒர்த் இல்லாத நடிப்பை வெளிப்படுத்திவிட்டு 200 கோடி சம்பளம் வாங்குவது எந்த வகையில் நியாயம். படங்கள் தோல்வியடைந்தாலும் நடிகர்கள் சம்பளத்தை குறைக்காமல் இருப்பது அநியாயம் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். அவரின் இந்த பேச்சு பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க
06:54 PM (IST) Nov 01
புதுச்சேரியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட பலே பைக் திருடன் ரகுவை இரவு ரோந்து பணியின் போது போலீசார் திருட்டு வண்டியுடன் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
06:38 PM (IST) Nov 01
பெங்களூருவில் நடந்த அரசு விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாருக்கான கர்நாடக ரத்னா விருதை அவரது மனைவி அஸ்வினியிடம் வழங்கினார். மேலும் படிக்க
06:32 PM (IST) Nov 01
தமிழகத்தில் புதிய கல்வி கொள்கை பிரமாதமாக கடைபிடிக்கப்பட்டு வருவதாக மத்திய கல்வி இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் கூறியுள்ளார்.
05:43 PM (IST) Nov 01
கடந்த வார இறுதியில் வெளியிடப்பட்ட Ipsos என்ற கணக்கெடுப்பில் 14 சதவீத பிரிட்டனை சேர்ந்தவர்கள் தங்களை நிர்வாணவாதிகள் என்று விவரித்துள்ளனர். ஏன் தெரியுமா ? அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
05:36 PM (IST) Nov 01
டி20 உலக கோப்பையில் இன்று நடந்த சூப்பர் 12 போட்டியில் நியூசிலாந்து அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தி உள்ளது இங்கிலாந்து அணி.மேலும் படிக்க
03:39 PM (IST) Nov 01
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
03:11 PM (IST) Nov 01
குஜராத், மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பழங்குடியினரால் போற்றப்படும் பன்ஸ்வாராவில் உள்ள மான்கார் தாமுவில் பிரிட்டிஷ் ராணுவத்தால் கொல்லப்பட்ட்ட பழங்குடியினருக்கு அஞ்சலி செலுத்தினர் பிரதமர் மோடி.
03:11 PM (IST) Nov 01
கோவையில் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தி அபகரிப்பு செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பிரபல வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
02:14 PM (IST) Nov 01
தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குனரகம், தமிழ்நாடு நீட் முதுகலை 2022 ஆம் ஆண்டுக்கான கவுன்சிலிங் 2ம் சுற்று ஒதுக்கீடு பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
01:55 PM (IST) Nov 01
இந்தியாவில் மொழி வாரியாக மாநிலங்கள் பிரிந்து இன்றுடன் 66 ஆண்டுகள் கடந்துள்ளது.
01:24 PM (IST) Nov 01
ஜூஸ் கொடுத்து காதலனை கொலை செய்த சம்பவம் தொடர்பாக பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. போலீசில் சிக்காமல் கொலை செய்வது எப்படி? என காதலி கிரீஷ்மா கூகுளில் தேடியது அம்பலமாகியுள்ளது.
12:17 PM (IST) Nov 01
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் 12 ரவுடிகள் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
11:45 AM (IST) Nov 01
எம்பிபிஎஸ் பாடங்களை தமிழில் படிப்பதற்கான பாட புத்தகங்கள் மொழி பெயர்க்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் தமிழில் பாடங்களை படித்தாலும் ஆங்கிலத்தில் தான் தேர்வெழுத வேண்டும் என மருத்து கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க..
11:17 AM (IST) Nov 01
மழையின் தீவிரம் மிக அதிகமாக இருப்பதால் வீட்டினுள் இருந்து சாலைகளில் பயணத்தை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
10:50 AM (IST) Nov 01
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் கனமழை வௌத்து வாங்கி வருகிறது. இதனால், பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
08:57 AM (IST) Nov 01
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
08:56 AM (IST) Nov 01
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான 4 விழுக்காடு அகவிலைப்படி உயர்வை 01-07-2022 முதல் வழங்க வேண்டும் என தமிழக அரசை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.
08:56 AM (IST) Nov 01
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
07:56 AM (IST) Nov 01
சென்னையில் வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.116 குறைந்து ரூ.1,893க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
07:29 AM (IST) Nov 01
சென்னையில் வர்த்தக பயன்பாட்டு கேஸ் சிலிண்டரின் விலை ரூ.116 குறைந்து ரூ.1893க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
07:19 AM (IST) Nov 01
தொடர் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
07:18 AM (IST) Nov 01
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது.