Asianet Tamil News Live: ஓபிஎஸ் இல்லத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
Feb 23, 2023, 2:23 PM IST
![Tamil News live updates today on february 23 2023](https://static.asianetnews.com/images/default-img/default/default-image_768x330xt.jpg)
![Tamil News live updates today on february 23 2023](https://static-gi.asianetnews.com/images/01gsypzmkhtrz1g0zj03ghba44/ops_900x450xt.jpg)
அதிமுக பொதுக்குழு தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியாகி உள்ள நிலையில் ஓபிஎஸ் இல்லத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உதவி ஆணையர் ராம ஸ்ரீ காந்த் தலைமையில் 20 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வழக்கமாக 7 காவலர்கள் மட்டுமே பணியில் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2:23 PM
3 ஆண்டுகளாக வீட்டுக்குள் முடங்கிய தாய், மகன் மீட்பு
ஹரியானாவில் கொரோனா தொற்று ஏற்படும் என்ற அச்சத்தில் 3 ஆண்டுகளாக தனி அறையில் முடங்கி இருந்த 35 வயது தாயும் 10 வயது மகனும் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருந்த அறை முழுவதும் குப்பைகளாக இருந்துள்ளன.
2:16 PM
இபிஎஸ்க்கு இது தற்காலிக வெற்றி தான்.. என்னுடைய பழைய நண்பர் ஓபிஎஸ் என்ன பண்றார்னு பார்ப்போம்.. டிடிவி..!
இரட்டை இலை சின்னம் இருந்தால் மட்டும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வென்றுவிடுவார்களா என டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
2:15 PM
அதிமுக வழக்கின் தீர்ப்பை அடுத்து ஓபிஎஸ்க்கு மற்றொரு அதிர்ச்சி.. அவசர அவசரமாக மருத்துவமனைக்கு சென்றார்..!
ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
2:15 PM
தீர்ப்பை நினைத்து இரவு தூக்கமே வரவில்லை.. எப்படி இருக்குமோ என பயந்தேன்.. எடப்பாடி பழனிசாமி..!
நான் நேற்றிலிருந்து கலங்கிப் போய் இருந்தேன். இன்று தீர்ப்பு வருகிறது என்று நேற்று இரவு செய்தி கிடைத்தது. இதனால் மனதில் அச்சம் ஏற்பட்டது. இதன் காரணமாக இரவில் தூக்கம் வரவில்லை. உதட்டில் தான் சிரிப்பு இருந்தது. உள்ளத்தில் இல்லை.
11:37 AM
துரோக சக்திகளுக்கு நாடாளுமன்ற தேர்தலில் பதிலடி கொடுப்போம்..! இபிஎஸ்யை அலறவிடும் டிடிவி தினகரன்
துரோக சக்திகளுக்கும், தீய சக்திகளுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் நம் கழக கண்மணிகள் அயராது உழைப்பைக் கொடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
11:19 AM
ஓபிஎஸ்-இபிஎஸ் உச்சக்கட்ட மோதல்.! பொதுக்குழு தொடங்கி உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பு வரை அதிமுகவில் நடந்தது என்ன..?
அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டதில் இருந்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே மோதல் தொடங்கியது. இதனையடுத்து நடைபெற்ற பொதுக்குழுவில் ஓபிஎஸ் நீக்கப்பட்டதும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றதும் அடுத்தடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.
10:51 AM
அதிமுக பொதுக்குழு செல்லும்.. ஓபிஎஸ் மனு தள்ளுபடி.. உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!
கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
8:56 AM
ஆர்எஸ்எஸ் பேரணிக்கு எதிராக தமிழக அரசு அதிரடி நடவடிக்கை..! பாராட்டு தெரிவித்த கே.பாலகிருஷ்ணன்
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்ததற்கு மார்க்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
8:18 AM
தஜிகிஸ்தானில் அதிகாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. அலறியடித்து எழுந்த பொதுமக்கள்.. சாலையில் தஞ்சம்.!
தஜிகிஸ்தான் பகுதியில் இன்று அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியிருந்தது.
8:18 AM
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் அருகே பயங்கரம்.. வழக்கறிஞர் பட்டப்பகலில் வெட்டி படுகொலை..!
தூத்துக்குடியில் பட்டப்பகலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் வழக்கறிஞர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
8:16 AM
அஜித் இல்லேனா என்ன மாமாகுட்டி இருக்காரே... விக்கியின் அடுத்த படத்தில் இணையும் பிளாக்பஸ்டர் நாயகன்..!
ஏகே 62 படத்தில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து இயக்குனர் விக்னேஷ் சிவன், தனது அடுத்த படத்தில் இரண்டு ஹீரோக்களை நடிக்க வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க
7:43 AM
இந்த பார்முலா எலக்ஷன் கமிஷன் அனுமதித்தால் இனி தமிழகத்தில் எந்த தேர்தலும் நியாயமாக நடக்காது!அலறும் கிருஷ்ணசாமி
இதன் விளைவாக இப்பொழுது ஈரோட்டில் ஒரு புதிய பார்முலா கண்டுபிடிக்கப்பட்டு அமலாக்கப்பட்டிருக்கிறது. ஆளும் தரப்பு ஆதரவு பெற்ற வேட்பாளருக்கு ஆதரவாகவே இத்தனைக் கூத்துகளும் அரங்கேறுகின்றன. இந்த பார்முலா வெற்றியடைய தேர்தல் ஆணையம் அனுமதிக்குமேயானால், தமிழ்நாட்டில் இனி எந்தவொரு தேர்தலும் இம்மியளவும் நியாயமாக நடக்க வாய்ப்பேயில்லை. ’ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து கடைசியாக ஆளையே கடிப்பது’ என்பதைப் போல ஈரோட்டில் தங்களுடைய ஆதரவு வேட்பாளரை வெற்றிபெற வைப்பதற்காக ஆளுங்கட்சி ஜனநாயகத்தைக் கடித்துக் குதறுவதாகவே தெரிகிறது.
7:40 AM
நீ ஒரு ஆர்டிஸ்ட்னு நிரூபிச்சுட்ட... செல்பி எடுத்து கின்னஸ் சாதனை படைத்த நடிகர் அக்ஷய் குமார் - வைரல் வீடியோ
செல்பி திரைப்படத்திற்காக வித்தியாசமான முறையில் புரமோஷன் செய்துள்ள நடிகர் அக்ஷய் குமார் கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார். அதன்படி அவர் 3 நிமிடங்களில் 184 செல்பி புகைப்படங்களை எடுத்து சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடித்து உள்ளார். மேலும் படிக்க